tamilnadu

மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீட்டை பாதுகாத்திடுக... 1ம் பக்கத் தொடர்ச்சி

நிதி நிலை அறிக்கைகளே செல்லும்  திசை தெரியாமல் திகைத்து நிற்கின்றன. 

கட்டுக்கடங்காமல் பரவும் நோய்
கொரோனா நோய் அதிகம் பாதித்த மாநிலங்களில் நாட்டிலேயே தமிழ்நாடு இரண்டாவது மாநிலமாகவும், அதிக உயிரிழப்பு நிகழ்ந்ததில் தென்னகத்தில் முதல் மாநிலமாக இடம்பெறும் அளவிற்கு “கொரோனா நோயை” கட்டுப்படுத்துவதில் அதிமுகஆட்சி தோல்வி கண்டு விட்டது. தமிழ்நாட்டில் உள்ளகொரோனா நோய் பாதிப்பில் சென்னை பத்தாயிரத்தையும் தாண்டி முதலிடம் வகிக்கிறது. கட்டுக்கடங்காமல் தினமும் நோய்த் தொற்று பரவி வருவதையும், பரிசோதனை விபரங்களை மாவட்ட 
வாரியாக வெளியிட மறுத்து வெளிப்படைத் தன்மையைப் பின்பற்றுவதையும் மறுத்து வருவதை, அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் அதிர்ச்சியுடன் கவனத்தில் எடுத்துக் கொள்கிறது. 

அதிமுக அரசு தோல்வி 
அதிமுக அரசின் சார்பில் முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லை; ஊரடங்கு அறிவிப்பதில் குழப்பம்; ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5000 ரூபாய் பண உதவி அளிக்கவில்லை; தங்கள்உயிரை பணயம் வைத்து, மக்களைக் காப்பாற்றும்மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணி யாளர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள், தமிழக காவல்துறையினர் உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாதது; அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும்- விவசாயத் தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும்- பாதிப்பிற்கும், வாழ்வாதார இழப்பிற்கும் உள்ளானயாருக்கும் உதவி செய்யாமல் கைவிரித்தது; அதி விரைவு பரிசோதனைக் கருவிகள் கொள்முதலில் ஊழல்; “ஊரடங்கிற்குள் ஓர் ஊரடங்கை” அவசர கதியில் அறிவித்தது, தாய்மார்கள் கண்ணீர் சிந்தி - கைகூப்பி எதிர்த்தும், பிடிவாதமாக உச்சநீதிமன்றம் வரை சென்று ‘டாஸ்மாக்’ கடைகளைத்  திறந்தது,    அரசியல்  கட்சிகளை அழைத்து- ஜனநாயக ரீதியில் ஒரு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டிஆலோசிக்காமல் புறக்கணித்தது, கொரோனா வுக்கு எதிரான நடவடிக்கைகள் அனைத்தையும் பரவலாக்காமல்,  மையப்படுத்தி முக்கியத்துவம் பெற முயற்சி செய்வது,  என  அனைத்து முனைகளிலும் தோல்வி கண்டுள்ளார்  முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி என்பதை இந்தக் கூட்டம் பதிவு செய்கிறது. 

ஆக்கப்பூர்வமான நடவடிக்கை தேவை 
ஊரடங்கிற்குப் பிறகு மாநிலத்தின் நிதி ஆதாரம், பொருளாதார மீட்சி, தொழில் வளர்ச்சி, மக்களின்வாழ்க்கைத் தரம் ஆகியவற்றை முன்னெடுப்ப தற்கான திட்டங்கள் ஏதுமின்றி, “விளம்பரத்திற்காக” மட்டுமே குழுஆலோசனைக் கூட்டங்களை நடத்தி; தினமும் பரவி தீவிரமாகி வரும் கொரோனா நோய்த் தொற்று பற்றியும் - துயரத்தில் மூழ்கியுள்ள மக்களின் நிலை பற்றியும், கண்ணோட்டமின்றி  இருப்பது கண்டனத்திற்குரியது. ஆகவே தமிழ்நாட்டில் - குறிப்பாக சென்னையில், கொரோனா நோயைக் கட்டுப்படுத்தி, மக்களைக் காப்பாற்ற  உடனடியாக ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

ரூ.12500 வழங்குக
வேறு மாநிலங்களிலும், உலகத்தில் பல்வேறு இடங்களிலும் பணியாற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவரவர் மாநிலத்திற்கு பாதுகாப்பாக திரும்ப மத்திய- மாநில அரசுகள் கட்டணம் ஏதுமின்றி, உரிய ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் எனக் இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டிருப்போருக்கு மத்திய அரசின் சார்பில் தலா 7500 ரூபாயும்; மாநில அரசின் சார்பில், பாதிக்கப்பட்டோருக்கு 5000 ரூபாயும்; வழங்கிட வேண்டும் எனவும்  அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் மத்திய - மாநில அரசுகளை மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

மின்திருத்தச்சட்டத்தை திரும்பபெறு
கொரோனா ஊரடங்கு நெருக்கடி நேரத்தில் “புதிய மின்சாரத் திருத்தச் சட்டம்-2020” மசோதாவின் மீது கருத்துக் கேட்கும் வைபவத்தை நடத்தி - நாட்டிற்கே முன்னோடியாக, தமிழகத்தில் திமுகஆட்சியில்,  கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது, அறிமுகப் படுத்தப்பட்டு,  அனைத்து விவசாயிகளுக்கும் கடந்த 30 ஆண்டுகளாக வழங்கப்பட்டு, வேளாண்மை முன்னேற்றத்திற்கு அடிப்படையாக இருந்துவரும்  இலவச மின்சாரத் திட்டத்தை  ரத்து செய்யவும், அதன் மூலமாக மாநில உரிமைகளை மேலும்  பறித்திடவும்,  உள்நோக்கத்துடன் செயல்படும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு,  அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. 

மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையங் களெல்லாம்  மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது, மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையங்களுக்குத் தலைவர் - உறுப்பினர்களைக் கூட  மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் “தேர்வுக் குழுவே” நியமிப்பது, ஐந்து பேர் கொண்ட அந்த தேர்வுக்குழுவில் இந்திய மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களில் இருவரை மட்டுமே உறுப்பினர்களாக வைத்துக் கொள்வது, தமிழ்நாட்டில் உள்ள மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் உறுப்பினரோ, தலைவரோ இல்லாமல் இருந்தால் - தமிழ்நாடு ஆணையத்தின் பணியை வேறொரு மாநிலத்தின் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கவனிக்க மத்திய அரசு உத்தரவிடுவது,  “மின் கொள்முதல், மின் விற்பனை, மின்சாரத்தை அனுப்புதல்” உள்ளிட்ட அனைத்து ஒப்பந்தங்கள் தொடர்பான தாவாக்களை, இனிமேல் மத்திய அரசின்கீழ் அமைக்கப்படும் “மின் ஒப்பந்த அமலாக்க ஆணையம்” ஒன்றே தீர்வு காணும் என்பது - மாநிலங்களுக்கு எந்தவொரு பிரதிநிதித்துவமும் இல்லாமல் இப்படியொரு ஆணையத்தை உருவாக்குவது போன்ற  நடவடிக்கைகளுக்கு வழி திறந்து; மாநில உரிமைகளைக் கையகப்படுத்திக் கொள்ளவும், விவசாயிகள் மற்றும் நெசவாளர்களுக்கான இலவச மின்சாரத்தையும், வழிபாட்டு தலங்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கான கட்டண சலுகைகளை ரத்து செய்யவும் கொண்டு வரப்படும்;  இந்த “புதிய மின்சாரச் சட்டத் திருத்த மசோதாவை” உடனே திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய பா.ஜ.க அரசை இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

மருத்துவர் - செவிலியர்களுக்கு பாராட்டு
கொரோனா பேரிடரிலிருந்து தமிழக மக்களைக் காப்பாற்றும் மிக முக்கியப் பணியில்  மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள், தமிழக காவல்துறையினர் உள்ளிட்ட அரசு ஊழியாளர்கள் அனைவரும் ஆற்றி வரும் தன்னலமற்ற சேவைக்கும், இரவு பகல் என்று பாராது உழைத்து வருவதற்கும் இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் மனமுவந்த பாராட்டுதலை தெரிவித்துக் கொள்கிறது. ஊரடங்கு காலத்தில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிய தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்ளும் இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம், இனி வரும் நாட்களிலும் அரசின் “சுகாதார அறிவுரைகளுக்கு” மதிப்பளித்து கட்டாயம் முகக் கவசம் அணிந்து- சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து கொரோனா நோய் தொற்றிற்கு எதிரான போராட்டத்தில் நாட்டிற்கே முன்னோடிகளாக விளங்கிட வேண்டும் என்று இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் அன்புடன் கேட்டுக் கொள்கிறது.இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

;