தென் கொரியாவில் இரண்டு பயிற்சி விமானங்கள் இன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 4விமானிகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தென்கிழக்கு நகரமான சச்சியோனில் உள்ள விமான தளம் அருகே மதியம் 1:35 மணி அளவில் KT1 பயிற்சி விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 4 விமானிகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. விபத்துக்குள்ளான பகுதியில் 30 தீயணைப்பு வீரர்கள் ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.