world

img

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துமாறு தென்கொரியா அரசு வலியுறுத்தல்

தடுப்பூசி செலுத்திய முதியவர்களுக்கு மீண்டும் கொரோனா ஏற்பட்டதால் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துமாறு தென் கொரியா அரசு வலியுறுத்தி உள்ளது.  

தென் கொரியாவில் அக்டோபர் மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் தினமும் 300 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது எண்ணிக்கை 450ஐ கடந்தது. இதில் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களில் 82 சதவீதம் பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாகவும், 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களாகவும் உள்ளனர். இதையடுத்து அனைவரும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு அந்நாட்டு அரசு அறிவுறுத்தி உள்ளது.

;