வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்தனர்.
தலைநகர் ஹனேய்க்கு தெற்கே 800 மைல் தொலைவில் உள்ள ஹோய் ஆன் அருகே 39 சுற்றுலாப் பயணிகளுடன் படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது மோசமான வானிலை காரணமாக அலைகள் வேகமாக எழுந்ததால் படகு திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 13 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். மேலும் 4 பேர் காணாமல் போனதாகவும் உள்ளூர் செய்தி ஊடகங்கள் தகவல் தெரிவித்தன.
இதுகுறித்து தகவலறிந்து வந்த மீட்புப்படையினர் மீட்புப்பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அதனைதொடர்ந்து காணாமல் போனவர்களை தற்போது வரை கிடைக்காத நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என ஹோய் ஆன் நகர அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.