- உக்ரைன் அரசுக்கு நிதி அளிப்பதே அமெரிக்கா தான் எனவும் இந்த நிதியை நிறுத்தினால் அடுத்த நிமிடமே உக்ரைன் அரசாங்கம் தகர்ந்துவிடும் எனவும் ஜெலன்ஸ்கி விமானம் ஏறி தனது ஆடம்பர சொகுசு வீட்டில் தஞ்சம் அடைந்துவிடுவார் எனவும் அமெரிக்க முன்னாள் ராணுவ அதிகாரி டொக்லாஸ் மெக்ரோகர் பேட்டி அளித்துள்ளார்.
- இதனை அமெரிக்க மக்கள் உணர்வார்களா?
- உக்ரைன் நிகோலேவ் பகுதியில் நடந்த சண்டை யில் ஒரே நாளில் 500 உக்ரைன் வீரர்கள் கொல்லப் பட்டனர் என ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது.
- நேட்டோவுக்காக இன்னும் எத்தனை உயிர்கள் பலியாக வேண்டும்? விதிகளை தளர்த்தி உக்ரைனுக்கு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் தகுதியை விரைவுபடுத்த இயலாது என பிரான்சு அறிவித்துள்ளது.
- ஐரோப்பிய நாடுகளிடையே முரண்பாடுகளா? உக்ரைன் வெற்றி குறித்த பொய்ப் பிரச்சாரம் பின்னு க்குப் போகும் நிலையில் மேற்குலகில் முரண்பாடு கள் தோன்றியுள்ளதை கிளன் டைசன் எனும் பத்திரி கையாளர் வெளிப்படுத்தியுள்ளார்.
- அமெரிக்காவும் பிரிட்டனும் போரை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் ஜெர்மனியும் பிரான்சும் சமாதானம் தேவை எனவும் எண்ணுவதாக அவர் கூறுகிறார்.
- ரஷ்யா மீது விதிக்கப்பட்ட தடைகள் காரணமாக மற்ற நாடுகளின் முதலீட்டாளர்கள் அமெரிக்காவில் முதலீடு செய்ய தயங்குகின்றனர் எனவும் ரஷ்ய முதலீட்டாளர்களின் நிதியை முடக்கியது போல தமக்கும் நிகழலாம் என அஞ்சுவதாகவும் மிகப் பெரிய பங்குச் சந்தை முதலீட்டாளர் ரே டெய்லோ கூறியுள்ளார்.
- அவருக்கு தெரிவது அமெரிக்க அரசியல்வாதிகளுக்கு தெரியவில்லையே!
- டான்பாஸ் பகுதியில் மட்டும் உக்ரைன் விதைத்த 30,000 கண்ணி வெடிகளை அகற்றியுள்ளதாக ரஷ்ய ராணுவம் வெளிப்படுத்தியுள்ளது.
- ரஷ்ய படை யெடுப்புக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே உக்ரைன் அமெரிக்க உதவியுடன் போர் தயாரிப்புகளில் ஈடுபட்டு வந்தது எனும் கூற்று உண்மை என நிரூபணம் ஆகிறது.
- இந்திய வணிக குழுமம் ஒன்றின் பல கிளைகள் ரஷ்யாவில் நிறுவிட பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தடை களால் நட்டம் மேற்குலக நிறுவனங்களுக்கு! லாபம் இந்திய குழுமத்துக்கு!