ரஷ்யாவில் பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 8 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவிற்கு கிழக்கே 1,300 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பெர்ம் பல்கலைக்கழகம் . இங்கு இன்று காலை 11 மணியளவில் பல்கலைக்கழகத்திற்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர் திடீர் என துப்பாக்கி சூடு நடத்தினார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவ- மாணவிகள் ஜன்னல் வழியாக குதித்து உயிர் தப்பினர். இந்த துப்பாக்கி சூட்டில் 8 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 10க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில் துப்பாக்கி சூடு நடத்தியவர் பல்கலைக்கழக மாணவர் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.