world

img

உக்ரைன் - ரஷ்யா போர்: கள நிகழ்வுகள்

விர்ஜினியா மாநிலத்தில் நாஜிக்களின் பேரணியை பார்த்த பின்னர்தான் அவர்களை அமெரிக்க மண்ணில் அனுமதிக்க கூடாது என ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடிவு செய்ததாக ஜோபைடன் கூறினார். அதே பைடன் இப்பொழுது உக்ரைன் நாஜிக்களை ஆதரிக்கிறார்; அவர்களுக்கு ஆயுதங்களை வழங்குகிறார்.

“புடின் ரஷ்யாவை ஆள தகுதியற்றவர்; கடவுளே! பதவியில் புடின் இருக்க கூடாது” என ஜோ பைடன் போலந்தில் பேசினார். பைடனின் அலுவலகமோ அவர் பேசியதன் உண்மையான பொருள் “ரஷ்யா தனது அண்டை நாடுகளின் மீது தாக்குவதை அனுமதிக்கக் கூடாது என்பதுதான்” என விளக்கம் அளித்துள்ளது. அமெரிக்காவின் உண்மையான கருத்து எது? 80 வயதான பைடன் பேசுவதா? அல்லது அவரது அலுவலகம் சொல்வதா? என பலரும் குழம்பியுள்ளனர்.

போலந்து தனது போர் விமானங்களை உக்ரைனுக்கு தருவதை அமெரிக்கா பச்சைக் கொடி காட்டிவிட்டது என ஜெலன்ஸ்கி கூறுகிறார். போர் விமானங்கள் இல்லாமல் கடும் நெருக்கடியில் உக்ரைன் உள்ளது.

டோன்பாஸ் பகுதியை விடுவிப்பது எனும் உக்ரைன் போரின் முதல் கட்டம் பூர்த்தியாகிவிட்டது எனவும் அடுத்த கட்டம் விரைவில் தொடங்கும் எனவும் அனைத்தும் எங்களது திட்டப்படி நடக்கிறது எனவும் ரஷ்ய ராணுவ அதிகாரி கூறியுள்ளார்.
போரில் முதல்முறையாக ரஷ்ய போர்க் கப்பலிலிருந்து “கலிபர்” எனும் அதிவேக ஏவுகணையை ரஷ்யா உக்ரைன் மீது ஏவியுள்ளது.
பிரிட்டனில் உணவு கூப்பன்களை பயன்படுத்தும் ஏழை மக்கள் இலவசமாக தரப்படும் உருளைக்கிழங்குகளை வாங்க மறுக்கின்றனர். ஏனெனில் அவற்றை சமைக்கும் எரிபொருள் வாங்க தங்களிடம் பணம் இல்லை என கூறுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ரஷ்யா மீது தடைகள் விதித்ததன் விளைவாக மேற்கத்திய நாடுகள் பெரும் விலையை தர வேண்டியிருக்கும் என முன்னாள் பிரிட்டன் உதவி படைத்தளபதி ஜோனதன் ஷா கூறியுள்ளார்.

உக்ரைனில் ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடனின் நிறுவனங்கள் உயிரி ஆயுதங்கள் சோதனைக் கூடங்களுக்கு நிதி உதவி செய்ததற்கான மின்னஞ்சல் ஆதாரங்கள் தம்மிடம் உள்ளதாக ரஷ்ய ராணுவம் அறிவித்துள்ளது. இது குறித்து சர்வதேச மக்களுக்கு அமெரிக்கா விளக்கம் அளிக்க வேண்டும் என சீனா வற்புறுத்தியுள்ளது.

மார்ச் மாதம் 29 முதல் 31ம் தேதி வரை உலகில் உள்ள பல சூன்யக்காரர்கள் ஒன்று சேர்ந்து புடினுக்கு எதிராக மந்திரங்களிலும் யாகங்களிலும் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். உக்ரைன் கீவ் நகரம் மற்றும் வேறு சில ஐரோப்பிய நாடுகளிலும் இந்த சூன்யங்கள் நடைபெறும் என அவர்கள் அறிவித்துள்ளனர்.

உக்ரைனின் சுலவேடிச் நகரம் ரஷ்ய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. அந்த நகரின் மேயர் ரஷ்ய ராணுவத்திடம் சரண் அடைந்தார். உக்ரைன் அரசாங்கம் அளித்த ஆயுதங்களை மக்கள் ரஷ்ய ராணுவத்திடம் ஒப்படைத்தனர். அந்த நகருக்கு வேண்டிய உணவுப்பொருட்கள் உட்பட அனைத்து நிவாரணங்களும் அளிக்க ரஷ்ய ராணுவம் ஏற்றுக்கொண்டுள்ளது.

மலேசியா/ சிங்கப்பூர்/ வியட்நாம்/ கம்போடியா/ லாவோஸ்/ புருனி/ தாய்லாந்து/ பிலிப்பைன்ஸ்/ இந்தோனேஷியா/ மியான்மர் ஆகிய தேசங்கள் அடங்கிய “ஆசியன்” அமைப்பை பைடன் சந்திப்பதாக இருந்தது. ஆனால் இப்பொழுது இந்த சந்திப்பு காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பில் சிங்கப்பூர் தவிர வேறு எந்த தேசமும் ரஷ்யா மீது தடைவிதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.