கீவ், மார்ச் 27- உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலைத் தொடங்கி ஒரு மாதத்திற்கும் மேல் ஆகிவிட்ட நிலையில் ஜனாதி பதி ஜோ பைடன் அண்மையில் போலந்து- உக்ரைன் எல்லையில் உள்ள நகரத்திற்குச் சென்றார். அங்கே அவர் உக்ரைன் பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேசி னார். இந்த நிலையில் இது குறித்து உக்ரைன் பெண் எம்.பி.யான இன்னா சாவ்சன் தனது ட்விட்டர் பக்கத் தில், “நான் வெளிப்படையாகவே கூறுகிறேன். மேற் கத்திய நாடுகள் உதவும் என்று உறுதியளிக்கப்பட்டது. அந்த நம்பிக்கை இருந்தது. ஆனால் அது தொடர்பாக ஒரு வார்த்தையைக் கூட நான் கேட்கவில்லை. போலந்து பாதுகாக்கப்படும் என்று பைடன் உறுதி யளித்தார். அதில் எனக்கு மகிழ்ச்சியே. ஆனால் குண்டு கள் வார்சாவில் அல்ல கார்கிவ்விலும், கீவிலும் வெடித்துக் கொண்டிருக்கின்றன” என்று தெரி வித்துள்ளார்.