world

img

ரசாயன ஆலையில் வெடிவிபத்து : ரஷ்யாவில் 16 பேர் பலி....

மாஸ்கோ 
ரஷ்யாவில் உள்ள பிரபல ரசாயன ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டு 16 பேர் பலியாகியுள்ளனர்.

அந்நாட்டின் மேற்கு ரியாசான் மாகாண பகுதியில் உள்ள ரசாயன ஆலையில் தொழிநுட்ப செயல்முறைகளை தவறாக பயன்படுத்தியதால் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.இந்த வெடிவிபத்தால்  ஆலையின் கட்டிடங்கள் தரைமட்டமாகின.தீ விபத்து காயங்கள்  மற்றும் இடிபாடுகளில் சிக்கி 16 பேர் உயிரிழந்துள்ளனர்.வெடிவிபத்து ஏற்பட்ட ஆலையில் துப்பாக்கி குண்டுகளும் தயாரிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

;