world

img

மெக்சிகோ துப்பாக்கிச்சூடு - மேயர் உட்பட 18 பேர் பலி

மெக்சிகோவின் குரேரோ மாகாணத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் அந்நகரத்தின் மேயர் உட்பட 18 பேர் பலியாகி உள்ளனர்.

மெக்சிகோவின் குரேரோ மாகாணத்தில் உள்ள சான் மிகுயில் டோட்டோலாபானில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் மேயர் கான்ராடோ மெண்டோசா அல்மேடா மற்றும் அவரின் தந்தை உட்பட 18க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்த தாக்குதலில் காவல்துறை அதிகாரிகளும் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குரேரோவின் பொது பாதுகாப்புத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.

 

;