பிரேசில் நாட்டில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 62 பேரும் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசில் நாட்டில் வோபாஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் வின்ஹெடோ நகரத்தின் மேல் பறந்துகொண்டிருந்த விமானம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
வீடுகள் நிறைந்த குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த விமானம் தீப்பற்றத் தொடங்கியது.
விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் விமானத்தில் பயணித்த 62 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஒரே விமானத்தில் பயணித்த 62 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.