பாரீஸ், மார்ச் 24- பிரான்ஸில் ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 62ல் இருந்து 64 ஆக உயர்த்த அந்நாட்டு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மசோதா கொண்டு வந்தார். தொடர்ந்து வலது சாரிக் கொள்கைகளுக்கு ஆதரவு தரும் செனட் அவை உறுப்பினர்கள் (201 உறுப்பினர்கள் ஆதரவுடன்) அதிகமாக உள்ளதை சாதகமாக பயன்படுத்தி தொழிலாளர் விரோத ஓய்வூதிய மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. 105 உறுப்பினர்கள் மசோதாவிற்கு எதிர்ப்பைப் பதிவு செய்தனர். மசோதா நிறைவேற்றப்பட்டதை அடுத்து ஓய்வு வயதை உயர்த்தும் திட்டம் இந்த ஆண்டு இறுதிக்குள் அமல்படுத்தப் படும் எனவும் பிரான்ஸ் அரசு அறி வித்துள்ளது. மசோதா நிறைவேறிய நாள்முதல் இன்று வர தொடர்ந்து 15 நாட்கள் தொழி லாளர்கள் தங்களது பணியிடங்களில் இருந்து வெளியேறி நாட்டின் பல்வேறு நகரங்களில் போராட்டம் நடத்தி வரு கின்றனர். மசோதா தாக்கல் செய்த நாளன்று 12 லட்சம் பேர் பேரணிகளில் பங்கேற்று எதிர்ப்பை பதிவு செய்த னர். ஆனால்போராட்டத்தை பிரான்ஸ் அரசு கண்டுகொள்ளாமல் மசோதாவை நிறைவேற்றியது. போராட்டத்தின் பொழுது சில இடங்களில் போலீசார் வன்முறையை அரங்கேற்றிய பொழு திலும், தொழிலாளர்கள் போராட்ட த்தை கைவிடவில்லை.
இந்நிலையில், வியாழனன்று ஓய்வூதிய மசோதாவிற்கு எதிர்ப்பு தெரி விக்கும் வகையில் பிரான்ஸ் முழுவதும் எட்டு தொழிற்சங்கங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரம்மாண்ட பேரணியில் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர். தொழிலாளர்களின் அணி வகுப்பால் பாரீஸ் நகர தெருக்கள் மூச்சு திணறியது. போலீசார் கணக்கின் படி சுமார் 1.19 லட்சம் பேர் தலைநகர் பாரீஸில் மட்டும் அணிவகுத்துச் சென்ற தாக கூறப்பட்டுள்ளது. பாரீஸில் இது வரை நடந்த போராட்ட பேரணி களிலேயே இதுதான் மிகப்பெரியது என பிரான்ஸ் உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
ஆசிரியர்களும் களமிறங்கினர்
இதுவரை மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்த பள்ளி ஆசி ரியர்கள் வியாழனன்று நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டனர். தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி களில் இருந்து 24% ஆசிரியர்களும், உயர்நிலைப் பள்ளிகளில் 15% ஆசிரி யர்களும் பேரணியில் கலந்து கொண்ட தாக பிரான்ஸ் கல்வி அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பாரீஸ் ஸ்தம்பித்தது
தொழிலாளர்கள் பேரணியில் கலந்துகொண்டதால் பொதுப்போக்கு வரத்தை இயக்க ஆளின்றி போக்கு வரத்து சேவைகள் தடைபட்டது. ரயில் சேவைகள், பாரீஸ் மெட்ரோ, பிற முக்கிய நகரங்களின் பாரீஸ் போக்கு வரத்து சேவை அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. தொழிலாளர்கள் இல்லாததால் பாரீஸ் ஓர்லி விமான நிலையத்தில் 30% விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. உலக அதிசயங் களில் ஒன்றான ஈபிள் கோபுரம், வெர்சாய்ஸ் அரண்மனை ஆகியவை மூடப்பட்டன.
வன்முறையை அரங்கேற்றிய காவல்துறை
பேரணியின் பொழுது பாரீஸில் உணவகங்கள், பல்பொருள் அங்காடி கள், வங்கியைத் தாக்கியதாக தொழி லாளர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தினர். பேரணியை கலைக்க போலீசார் பலமுறை கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். ஆனால் தொழிலாளர்கள் தொடர்ந்து அமைதி யாக பேரணியை நடத்தினர். பிரான்ஸ் நாட்டின் மேற்கு நகரங்களான நான் டெஸ், ரென்ஸ், லோரியண்ட் ஆகிய பகுதிகளிலும் வன்முறை நிகழ்ந்தது.
போராட்டக்களமாக மாறிய ரயில் நிலையம்
பாரீஸின் கேர் டி லியொன் ரயில் நிலையத்தில் பணிபுரியும் பல நூற்றுக் கணக்கான தொழிலாளர்கள் ரயில் நிலையத்திலேயே போராட்டம் நடத்தி னர். ரயில்கள் நகருவதை தடுக்க தண்ட வாளங்களில் அமர்ந்தனர். “நாங்கள் செல்வோம். திரும்பப் பெற்றபின் செல்வோம்”, “மக்ரோனே போ” என்று கோஷமிட்டு நாட்டின் முக்கிய ரயில் நிலையத்தை போராட்டக்களமாக மாற்றினர் தொழிலாளர்கள்.
பிரான்ஸ் தொழிற்சங்கங்கள் அழைப்பு
அடுத்த வாரம் பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் அரசு முறைப் பயண மாக பிரான்ஸ் வருகிறார். மன்னர் வரும் தினத்தன்று புதிய ஓய்வூதிய மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு தழுவிய புதிய போராட்டங்களுக்கு பிரான்ஸ் தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.