world

img

அர்ஜென்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்சி புதிய சாதனை

அர்ஜென்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்சி புதிய சாதனை படைத்துள்ளார்.

கால்பந்து விளையாட்டில் சிறப்பாக செயல்பட்டவருக்கு வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்று பலோன் டி ஓர். இவ்வாண்டிற்கான இந்த விருது வழங்கும் விழா பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீசில் நடைபெற்றது. இதில் சிறந்த வீரரை தேர்ந்தெடுப்பதில் கடும் போட்டி நிலவியது. இருப்பினும், அனைத்து வீரர்களையும் பின்னுக்கு தள்ளி அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் லியோனல் மெஸ்சி சிறந்த வீரருக்கான விருதை தட்டிச் சென்றார். மேலும், இந்த விருதை 7 ஆவது முறையாக பெரும் கால்பந்து வீரர் என்ற சாதனையும் அவர் படைத்தார்.

முன்னதாக, அண்மையில் நடைபெற்ற கோபா அமெரிக்கா சாம்பியன் பட்டத்தை மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா அணி வென்றது. இதுமட்டுமல்லாமல் இவ்வாண்டு நடைபெற்ற கால்பந்து போட்டிகளில் மெஸ்சி மொத்தம் 41 கோல்களை அடித்ததுடன், அவரது அணியினர் 17 கோல்களை அடிப்பதற்கும் அவர் உதவியுள்ளார். இதன் காரணமாகவே அவருக்கு இவ்வாண்டின் சிறந்த வீரருக்கான பலோன் டி ஓர் விருது வழங்கப்பட்டுள்ளதாக விழா ஏற்பாட்டினர் தெரிவித்துள்ளனர்.    

;