world

img

அடுத்த வாரத்தில் இந்தியா வருகிறது கடைசி 3 ரஃபேல் போர் விமானங்கள்  

பிரான்சிலிருந்து கடைசி 3 ரஃபேல் போர் விமானங்கள் அடுத்த வாரத்தில் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட உள்ளன.    

பிரான்சின் டசால்ட் நிறுவனத்துடன் சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாயில் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க 2016 ஆம் ஆண்டில் பிரான் அரசுடன் இந்தியா ஒப்பந்தம் செய்தது.  அதன்படி 2020ல் முதலாவதாக 5 போர் விமானங்கள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டு விமானப்படையில் சேர்க்கப்பட்டன.  அதன்பிறகு பல குழுக்களாக இதுவரை மொத்தம் 33 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியாவுக்கு வந்துள்ளன.  

இந்நிலையில் பிரான்ஸ் நாட்டில் இருந்து கடைசி கட்டமாக 3 ரஃபேல் போர் விமானங்கள் அடுத்த வாரம் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட உள்ளது.