world

img

சோகமும் துக்கமும் நிறைந்த கிறிஸ்துமஸ் : அகதிகள் முகாமில் குண்டு வீசி 70 பேர் படுகொலை

உலகம் முழுவதும் மக்கள் கிறிஸ்துமஸ் கொண்டாடி வரும்  நிலையில் காசாவில் அல்-மகாசி அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் ராணுவம் குண்டு வீசி 70 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களை படுகொலை செய்துள்ளது.மேலும் இஸ்ரேல் ஆக்கிரமிப்பில் உள்ள பெத்லகேமிலும் இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதல்களையும் அத்துமீறல்களிலும் ஈடுபட்டு வருகிறது.    

கிறிஸ்துமஸ் தின உரையாற்றும் போது, போப் பிரான்சிஸ் எங்கள் இதயங்கள் பெத்லகேமில் உள்ளன. பயனற்ற போர் வாதத்தால் அங்கு அமைதியின் இளவரசர் மீண்டும் ஒருமுறை நிராகரிக்கப்பட்டுள்ளார். போரின் காரணமாக அவர்  இன்று  உலகில் இடம் தேடுவது தடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.மேலும் அமைதியையும் அன்பையும் பரப்புங்கள் என கிறிஸ்துமஸ் செய்தியாக கூறிய அவர்  , உலக வெற்றி மற்றும் நுகர்வு கலாச்சாரம்  ஆகியவற்றின் காரணமாக வெறிபிடித்து இருக்க  வேண்டாம் என்று வலியுறுத்தினார். 

இந்த உலகில் சக்தி மற்றும் வலிமையை புகழ்,  அதற்கான தேடுதல், வெற்றி எண்ணிக்கை அதன்  புள்ளிவிவரங்கள் என்பவற்றின் அடிப்படையிலேயே  அளவிடுகிறது.உலகம் இந்த சாதனையை  வெறித்தனமாகத்  தேடுகிறது என போர் வெறியை நேரடியாக குறிப்பிடாமல் பேசினார். 

பாலஸ்தீன சுற்றுலாத்துறை அமைச்சரான ருலா மயாயா  “காசா மற்றும் மேற்குக் கரை என அனைத்து பாலஸ்தீனப் பகுதிகளிலும் நிலவிவரும் தற்போதைய சூழலின் காரணமாக பெத்லகேம் நகரம் துக்கத்துடனும் சோகத்துடனும் கிறிஸ்துமஸ் கொண்டாடுகிறது என தெரிவித்தார். 

காசாவில் போர்நிறுத்தம் செய்ய வேண்டும் என போப் பிரான்சிஸ் பல முறை வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்க அழைப்பு விடுத்து வருகிறார்.

கிறிஸ்துமஸ் தின இரவிலும் இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதலை நிகழ்த்தி வருகிறது.இதுவரை இஸ்ரேல் தாக்குதலால் 103 ஊடகவியலாளர்கள் படுகொலையாகியுள்ளதாக காசாவில் உள்ள  ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.டிசம்பர் 24 ஆம் தேதி முதல் கிறிஸ்துமஸ் இரவுக்குள் மட்டும் 166 பாலஸ்தீனர்கள் படுகொலையாகியுள்ளனர். 384 பேர் காயமடைந்துள்ளனர்.

இஸ்ரேல் ராணுவமும் ஹமாஸ் குழுவின் கொரில்லா தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல்  தொடர்ந்து இழப்புகளைச் சந்தித்து வருகின்றது. கடந்த ஒரு வாதத்தில் மாட்டும் 12 க்கும் மேற்பட்ட இஸ்ரேல் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். 

அக்டோபர் 7 முதல் இஸ்ரேலின் தாக்குதல்களில் 20,400 க்கும் மேற்பட்ட  பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 52,500 க்கு அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.