u காசாவில் இஸ்ரேல் குண்டு வீச்சில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,000ஐ தாண்டியது. 70% பெண்கள் மற்றும் குழந்தைகள்.
uஇஸ்ரேல் ராணுவம் இதுவரை அக்டோபர் 7ஆம் தேதியிலிருந்து 4540 பாலஸ்தீனர்களை மேற்கு கரை பகுதியி லிருந்து கைது செய்துள்ளது. அதே போல இதே காலகட்டத்தில் 505 பாலஸ்தீனர்கள், 111 குழந்தைகள் உட்பட, மேற்கு கரையில் கொல்லப்பட்டுள்ளனர். இங்கு ஹமாஸ் இல்லை என்பது கவனிக்கத்தக்கது.
uஇதுவரை 55 சரக்குக் கப்பல்கள் ஹவுதி அமைப்பின் எச்சரிக்கை காரணமாக வேறு பாதையில் திருப்பிவிடப் பட்டுள்ளன என சூயஸ் கால்வாய் பகுதி நிர்வாகம் அறி
வித்துள்ளது. இதன் விளைவாக இஸ்ரேலுக்கு சுமார் ரூ.12,000 கோடி நட்டம் ஏற்பட்டுள்ளது.
uஅமெரிக்க வெளியுறவு அமைச்சர் அந்தோணி பிளிங்கனிடம் பேசிய துருக்கி வெளியுறவு அமைச்சர் தனது செல்வாக்கை இஸ்ரேல் மீது செலுத்தி காசா தாக்குதலை நிறுத்துமாறு வலியுறுத்தினார். கல்லில் நார் உரிக்க முடியுமா? அமெரிக்கா இஸ்ரேலை தடுக்குமா?
uபிரான்சு இஸ்ரேலுக்கு எதிராக வலுவான நிலையை எடுக்க வேண்டும் என இடதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர் மனுவேல் பொம்பார்டு வலியுறுத்தியுள்ளார். பிரான்சுக்காக பணியாற்றிய தூதரக ஊழியர் குடும்பம் இஸ்ரேல் குண்டுவீச்சில் கொல்லப்பட்ட பின்னரும் பிரான்சு வெளியுறவு அமைச்சர் இஸ்ரேலின் தற்காப்பு உரிமைக்கு ஆதரவாக பேசியுள்ளார். இதனை மனுவேல் கடுமையாகச் சாடினார்.
uகாசா பகுதியில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு வருகை தந்த உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதிகள் அங்கு இஸ்ரேல் தாக்குதல் காரணமாக ரத்தக்களரி ஏற்பட்டுள்ளது என வேதனை தெரிவித்துள்ளனர்.
uபோர் நிறுத்தம் ஏற்படாமல் பணயக்கைதிகள் பரிமாற்றம் என்பது சாத்தியமில்லை என ஹமாஸ் அறிவித்துள்ளது.
uஉலகிலேயே காசா பகுதிதான் ஊடகவியலாளர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் மரண பூமியாக உள்ளது என ஐ.நா. தெரிவித்துள்ளது.
uதேவாலயத்தில் தஞ்சம் புகுந்த ஒரு கிறித்துவ தாயையும் அவரது மகள்களையும் குண்டு வீச்சில் கொன்ற இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைக்கு போப் ஆண்டவர் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.
uஏமனின் ஹவுதி அமைப்பினர் தாங்கள் இஸ்ரேலின் கப்பல்களை மட்டுமே பறிமுதல் செய்வதாகவும் ஆனால் தமது அமைப்பு அனைத்து கப்பல்களையும் தாக்குவதாக அமெரிக்கா பொய்ப் பிரச்சாரம் செய்கிறது எனவும் குற்றம்சாட்டியுள்ளது. ஹவுதி அமைப்பினருக்கு எதிர்வினையாற்ற அமெரிக்கா உருவாக்கியுள்ள பன்னாட்டு அமைப்புகளின் ராணுவத்தில் பிரிட்டன்/ ஸ்பெயின்/ ஜெர்மனி/நெதர்லாந்து/கனடா/ பிரான்சு/ இத்தாலி/ பஹ்ரைன்/நார்வே/ செசலியஸ் ஆகிய தேசங்கள் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலின் சரக்கு கப்பல்களை காப்பாற்ற பல நாடுகளை இணைக்கும் அமெரிக்கா, ஏன் காசா தாக்குதலை தடுக்க இவ்வாறு செயல்படவில்லை? அமெரிக்காவின் இஸ்ரேல் பாசத்துக்கு எல்லையே இல்லை போலும்.
uஇஸ்ரேல் காசா மக்களின் பட்டினியை ஒரு ஆயுதமாக பயன்படுத்த முனைந்துள்ளது என பல மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன.
uஇஸ்ரேலின் குண்டு வீச்சில் தாங்கள் மரணிக்க விரும்ப வில்லை எனவும் தங்களை உடனடியாக விடுதலை செய்யஇஸ்ரேல் முயல வேண்டும் எனவும் மூன்று பணயக்கைதிகள் வேண்டுகோள் விடும் காணொலியை ஹமாஸ் வெளியிட்டுள்ளது. பணயக்கைதிகளின் உயிர் இஸ்ரேலுக்குமுன்னுரிமை உள்ளதாக தெரியவில்லையே! அப்படி இருந்தால் வெள்ளைக் கொடி காட்டிய மூன்று இளம் இஸ்ரேல் பணயக்கைதிகளை ராணுவம் கொன்று இருக்குமா?
uஇஸ்ரேலின் சிறைகளில் பல பாலஸ்தீனக் கைதிகள் கொல்லப்பட்டனர் எனும் பகீர் செய்தி அல்மயாதீன் எனும் பத்திரிகை வெளியிட்டுள்ளது.
uகாசா பகுதி முழுவதும் காலி செய்யப்பட்டு தரைமட்டமாக்கப் பட வேண்டும் என டேவிட் அசவுலி எனும் இஸ்ரேலிய மேயர் கூறியுள்ளார். மனிதாபிமானத்தை முற்றிலும் அகற்றிவிட்டனர் போலும்!
uலெபனானில் நடந்த ஒரு இறுதி ஊர்வலத்தை இஸ்ரேல்குண்டுவீச்சு மூலம் தாக்கியுள்ளது. இதற்கு பதிலடியாக ஹெசபுல்லா இஸ்ரேலின் ஒரு ஆக்கிரமிப்பு நகரத்தை தாக்கியுள்ளது. வீடுகள்/ மருத்துவமனைகள்/ மசூதிகள்/ தேவாலயங்கள்/ பல்கலைக் கழகங்கள் என தாக்கிய இஸ்ரேல் ராணுவம் இப்பொழுது இறுதி ஊர்வலங்களையும் கல்லறைகளையும் விட்டுவைக்கவில்லை.
uலயலா மொரான் எனும் பாலஸ்தீன வம்சாவளி பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் தமது குடும்பத்தினர் காசாவில் ஒரு தேவாலயத்தில் தஞ்சம் புகுந்து உள்ளனர் எனவும் பல நாட்களாக உணவு இல்லாமல் இன்னல்படுகின்றனர் எனவும் இதே நிலை நீடித்தால் கிறித்துமஸ் வரை அவர்கள் உயிரோடு இருப்பார்களா என்பது தெரியவில்லை எனவும் அச்சம் தெரிவித்துள்ளார். இவரது அபயக்குரல் ரிஷி சுனாக்குக்கு கேட்குமா?
uஅமெரிக்காவில் “பாலஸ்தீனத்துக்கான யூதர்கள்” எனும் அமைப்பு இஸ்ரேலுக்கு எதிராக பல ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றது.
uஇஸ்ரேலின் ஒவ்வொரு அக்கிரமத்திலும் அமெரிக்கா வுக்கும் பங்கு உண்டு என ஈரான் குற்றம்சாட்டியுள்ளது.
uகாசா நெருக்கடி சர்வதேச சமூகத்தின் தார்மீக தோல்வி என செஞ்சிலுவை சங்கத்தின் சர்வதேச குழு தலைவர் மிர்ஜானா ஸ்போலிஜரிக் கூறியுள்ளார். இது காசாவில் மட்டுமல்ல உலகம் முழுதும் பல தலைமுறைகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் அவர் கூறினார்.
uஇஸ்ரேல் கப்பல்கள் அல்லது இஸ்ரேல் கொடியை தாங்கி யுள்ள கப்பல்கள் தனது துறைமுகங்களுக்கு வருவதை மலேசியா தடை செய்துள்ளது.
uசெயற்கை நுண்ணறிவு ஏற்பாடுகள் மூலம் இஸ்ரேல் காசாவில் நடத்திய கொடூரங்கள் முகநூலில் தடை செய்யப்பட்டதற்கு முகநூலின் மெட்டா இயக்குநர் குழு ஆட்சேபம் தெரிவித்துள்ளது. செயற்கைநுண்ணறிவு உட்பட எந்த ஒரு இயந்திர படைப்பும் சிறந்த விசுவாசமிக்க பணியாளர்; ஆனால்மோசமான எஜமான் என்பதை இது மீண்டும் நிரூபித்துள்ளது.
uஏமனின் ஹவுதி அமைப்பினர் பாலஸ்தீனத்தில் நடக்கும் கொடூரங்களை கண்டித்து இஸ்ரேல் கப்பல்களை மட்டும் செங்கடலில் தாக்குவதை அனைத்து கப்பல்களையும் தாக்குகின்றனர் என கூறி அதனை தடுக்க 10 தேசங்களின் கூட்டு ராணுவ அமைப்பை அமெரிக்கா உருவாக்கியுள்ளது. இதில் எவர் வேண்டுமானாலும் இணையலாம் எனவும் அறிவித்துள்ளது. இந்த ராணுவ கூட்டில் இணைய ஜோர்டான்/ சவூதி ஆகிய தேசங்களை அமெரிக்கா வலியுறுத்தியது. ஆனால் அந்த நாடுகள் நிராகரித்துவிட்டன. இதற்கிடையே எந்த தேசம் தங்கள் மீது தாக்கினாலும் அதற்கு பதில் தாக்குதல் உண்டு என ஹவுதி எச்சரித்துள்ளது. இஸ்ரேலின் கொலை வெறி தாக்குதலை தடுக்க முன்வராத அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களை பாதுகாக்க கூட்டணி அமைப்பது அப்பட்டமான இரட்டை வேடம்.
uதனது குடிமக்கள் எவராவது இஸ்ரேல் ராணுவத்தில் இணைந்து போரிடச் சென்றால் அது சர்வதேச போர் குற்றமாக கருதப்பட்டு கடும் தண்டனைகள் வழங்கப்படும் என தென் ஆப்பிரிக்க அரசாங்கம் எச்சரித்துள்ளது. காசாவின் தாக்குதலுக்கு பின்னர் இஸ்ரேலுடனான ராஜ்ய உறவை தென் ஆப்பிரிக்கா முறித்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. uகாசா போர் நிறுத்தத்துக்கு எதிராக உள்ள ஒரே நாடு அமெரிக்காதான் எனவும் இஸ்ரேலை கேடயம் போல பாதுகாப்பதும் அமெரிக்காதான் எனவும் ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது.
uஇஸ்ரேல் தாக்குதலில் கை கால்களை இழந்த பாலஸ்தீன குழந்தைகள் பின்னர் குண்டு வீச்சிலோ அல்லது மருந்துகள் இல்லாத காரணத்தாலோ உயிரிழக்கும் கொடூரங்களைக் காண,அளவிடமுடியாத வேதனை தருகிறது என ஐ.நா.வின் யுனிசெஃப் தலைவர்ஜேம்ஸ் எல்டர் கூறியுள்ளார்.
uஇஸ்ரேல் ஆதரவு நிலைபாடு காரணமாக ஐரோப்பா தனது தார்மீக நற்பெயரையும் நம்பகத்தன்மையையும் இழந்து கொண்டு வருகிறது என ஐரோப்பிய ஒன்றிய ஆணைய தலைவர் ஜோசப் பெரெல் கூறியுள்ளார். இந்த உண்மையை அமெரிக்காவை கண்மூடித்தனமாக ஆதரிக்கும் சில ஐரோப்பிய நாடுகள் செவிமடுக்குமா?
அ.அன்வர் உசேன்