புதுதில்லி, ஜன.27- காசாவில், பாலஸ்தீனர்கள் மீதான இனப்படுகொலையை, இஸ் ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று சர்வதேச நீதிமன்றம் தீர்ப்ப ளித்துள்ளது. பாலஸ்தீனத்தின் காசா பகுதி யில் மூர்க்கமான யுத்தத்தை நடத்தி வரும் இஸ்ரேல், குழந்தைகள், பெண் கள் உட்பட 26 ஆயிரம் பேரை கொன்று குவித்துள்ளது.
தொடர்ந்து குண்டு களை வீசி வருகிறது. இந்நிலையில், இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு எதிராக, சர்வ தேச நீதிமன்றத்தில் தென்னாப்பி ரிக்கா வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில்தான், 15-க்கு 2 எனும் வாக்கு வித்தியாசத்தில், காசாவில் இனப்படுகொலையை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும் என வும் போதுமான உதவிகளை காசா வுக்குள் அனுமதிக்க வேண்டும் என வும் சர்வதேச நீதிமன்றம் இடைக் கால தீர்ப்பு வழங்கியுள்ளது.
உலகின் பல தேசங்கள் இந்தத் தீர்ப்பை வரவேற்றுள்ளன. எனினும் தாங்கள் போரை நிறுத்தப் போவது இல்லை என இஸ்ரேல் இறுமாப்பு டன் கூறியுள்ளது. சர்வதேச நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னரும் இஸ்ரேல் இனப்படு கொலையில் ஈடுபடவில்லை என அமெரிக்கா கூறுகிறது. மேலும், இஸ் ரேலுக்கு எப். 16/எப். 35 ஆகிய நவீன விமானங்களையும் ஏராளமான ஆயு தங்களையும் தந்துள்ளது. ஏமன் ஹவுதி அமைப்பினர் பிரிட்டனின் மர்லின் லவுண்டா எனும் எண்ணெய் கப்பலை செங்கடல் பகு தியில் தாக்கினர்.
இதன் விளைவாக கப்பல் தீ பிடித்து எரிகிறது. இதற்கு பதிலடியாக அமெரிக்க விமானங்கள் ஏமன் மீது தாக்குதல்கள் நடத்தி யுள்ளன. ஆனால், இஸ்ரேல் கப்பல்கள் மட்டுமல்லாது அமெரிக்க - பிரிட்டன் கப்பல்களும் எங்களது சட்டப்பூர்வ போர் இலக்குகளாகும் என ஹவுதி மீண்டும் அறிவித்துள்ளது. பாலஸ்தீன பத்திரிகைகளும் பொதுமக்களும் சமூக ஊடகங்கள் மூலம் காசா மற்றும் மேற்கு கரை யில் நடக்கும் அக்கிரமங்களை அம்ப லப்படுத்துவதில் பி.பி.சி., சி.என்.என். போன்ற ஊடகங்களின் இருட்ட டிப்பையும் மீறி பெரும் வெற்றி அடைந்துள்ளன.
இதனை உணர்ந்த இஸ்ரேல் இப்பொழுது செயற்கை நுண்ணறிவு மூலம் பாலஸ்தீன ஆதரவு செய்திகளை முடக்கி இஸ்ரே லிய ஆதரவு செய்திகளை திணிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது என வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை தெரி விக்கிறது.