world

img

365 பாலஸ்தீனியர்கள் கைது

இஸ்ரேல் படையால் நவம்பர் மாதம் மட்டும் 365 பாலஸ்தீனியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேலிய ராணுவம் பல்வேறு அடக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு எதிராக பாலஸ்தீனத்தில் எதிர்ப்பு போராட்டங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. இத்தகைய பேராட்டங்களில் ஈடுபடுபவர்களை இஸ்ரேலிய போலீஸ் அத்துமீறி கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது. இவ்வாறு கைது செய்யப்படுபவர்கள் பல்வேறு சித்தரவதைகளுக்கு ஆளாக்கப்படுவதோடு, இருட்டறையிலும் அடைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த நவம்பர் மாதம் மட்டும் 365 பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இதில் 42 குழந்தைகளும், எட்டு பெண்களும் அடங்குவர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேபோல், 10 மீனவர்களும், 2 பத்திரிகையாளர்களும் இஸ்ரேலிய ராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர். இஸ்ரேலிய ராணுவத்தின் இத்தகைய அடக்குமுறைகளுக்கு பல்வேறு உலக நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

;