world

img

பாகிஸ்தான்: தீவிரவாத தாக்குதலில் 6 பேர் பலி

பாகிஸ்தானில் தீவிரவாதிகளின் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் 6 பேர் பலியாகி உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தானின் கைபர் பக்துங்கா மாகாணத்தில் உள்ள டாங்க் மாவட்டத்தில் உள்ள தலைமைப் பாதுகாப்பு அலுவலகத்தில் நேற்று தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் 6 பேர் பலியாகினர். மேலும், 22 பேர் காயமடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதல் குறித்து டாங்க் மாவட்ட காவல்துறை அதிகாரி வாகர் அகமது கான் கூறியதாவது,  திடீர் தாக்குதலில் தீவிரவாதிகள் தரப்பில் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய தீவிரவாதிகளை பிடிக்க  மாவட்டம் முழுவதும் சோதனை நடந்து வருகிறது’ எனத் தெரிவித்தார்.