கராச்சியில் பாதாள சாக்கடையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தான் – கராச்சியின் ஷெர்ஷா பகுதியில் உள்ள ஒரு வங்கி கட்டிடத்தின் அடியில் உள்ள பாதாள சாக்கடை கால்வாயிலிருந்து பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அந்த வங்கி கட்டிடமே இடிந்ததில் வங்கியில் இருந்த ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் சிக்கி கொண்டனர். விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அதனை தொடர்ந்து கழிவு நீர் அமைப்பிலிருந்து வெடி விபத்து நிகழ்ந்தது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது. அதேநேரத்தில் பைப்லைன் வெடித்ததா? அல்லது வேறு ஏதும் காரணமாக என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.