world

img

நியூயார்க்கில் ஃபைசர் நிர்வாகிகளுடன் கேரள முதல்வர் பினராயி விஜயன் சந்திப்பு

நியூயார்க், ஜுன் 10- அமெரிக்காவின் முன்னணி மருந்து உற்பத்தியாளரான ஃபைசர் நிறுவன தலை வர்களை கேரள முதல்வர் பினராயி விஜயன் நியூயார்க்கில் சந்தித்துப் பேசினார். உலக கேரள சபா மண்டல மாநாடு நடைபெற்று வரும் நியூ யார்க்கில் உள்ள மேரியட் மார்க்வே ஓட்டலில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. ஃபைசர் மூத்த துணைத் தலைவர்கள் டாக்டர் ராஜா மஞ்சிபுடி, டாக்டர் கண்ணன் நட ராஜன் மற்றும் டாக்டர் சந்தீப் மேனன் ஆகி யோர் முதல்வருடன் கலந்துரையாடினர். அப்  போது சென்னையில் உள்ள ஃபைசர் ஆராய்ச்சி  மையத்தின் கிளையை கேரளாவில் அமைப்பது  தொடர்பாக முதற்கட்டப் பேச்சுவார்த்தை நடை பெற்றது. ப்ரீ-கிளினிக்கல் ஆராய்ச்சித் துறை யில் கேரளா செய்யக்கூடிய பங்களிப்பைப் பற்றி ஃபைசர் நிர்வாகிகள் கேட்டறிந்தனர். பயோடெக்னாலஜி, பயோ இன்ஃபர் மேடிக்ஸ், புள்ளியியல் மற்றும் பயன்பாட்டுக் கணிதம் ஆகிய துறைகளில் கேரளாவின் ஆராய்ச்சி செல்வத்தை எவ்வாறு திறம்பட பயன்  படுத்துவது என்பது குறித்தும் குழு விவாதித்தது.  சுகாதாரத்துறையில் கேரளாவின் சாதனை களை அரசுத் தரப்பில் அதிகாரிகள் விளக்கினர். சமீபத்தில் பிரதமரால் திறந்து வைக்கப்பட்ட டிஜிட்டல் அறிவியல் பூங்காவுடன் இணைந்து பணியாற்றும் ஆர்வத்தை ஃபைசர் பிரதிநிதி களும் பகிர்ந்து கொண்டனர். அடுத்த கட்டமாக, ஃபைசரின் உயர் அதிகாரிகள் குழு செப்டம்பர் மாதம் கேரளாவிற்கு வரவுள்ளது. முதல்வருடன், தலைமைச் செயலாளர் வி.பி.ஜாய், முதன்மைச் செயலாளர் சுமன்  பிள்ளை, டாக்டர் ஜான் பிரிட்டாஸ் எம்.பி., ஐ.டி  செயலாளர் டாக்டர். ரத்தன் யு கேல்கர், சினேகில்  குமார் சிங் மற்றும் ஸ்டார்ட்அப் மிஷன் சிஇஓ  அனூப் அம்பிகா ஆகியோர் கலந்துரையாட லில் பங்கேற்றனர். ஞாயிறன்று பிரபலமான டைம் ஸ்கொயரில் முதல்வர் பினராயி விஜ யன் உரையாற்ற உள்ளார். இதில் அமெ ரிக்கா, கனடா நாடுகளில் வசிக்கும் கேரளத்தைச்  சேர்ந்தவர்கள் பெருமளவில் பங்கேற்க உள்ளனர்.