துபாய், பிப். 6- சில்வர் லைன் திட்டத்தை கேரள அரசு முன்னெடுத்துச் செல்லும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரி வித்துள்ளார். இந்த திட்டத்திற்கு ஒன்றிய அரசிடம் இருந்து இறுதி அனுமதி கிடைக்கும் என நம்புவ தாகவும், ஒன்றிய அரசு அறிவித்துள்ள வந்தே பாரத் ரயில் கேரளாவுக்கு ஏற்றதல்ல என்றும் முதல்வர் கூறினார். துபாயில் வெளிநாடு வாழ் மலையாளிகள் அளித்த வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் மேலும் பேசியதாவது: கே ரயிலின் சில்வர் லைன் திட்டத்திற்கான முதற்கட்ட ஒப்புதல் ஒன்றிய அரசிடம் இருந்து பெறப்பட்டது. இறுதி ஒப்புதலுக்காக கேரளம் காத்திருக்கிறது. மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் கேரளா வுக்கு ஏற்றதல்ல. இ.ஸ்ரீதரன் அவர்களே இதனைத் தெளிவுபடுத்தியுள்ளார்.
சிலர் அறியாமலும், சிலர் வேறு சில உள்நோக்கத்துடனும் கே ரயில் திட்டத்தை எதிர்க்கின்றனர். இது பிடிவாதமோ, சவாலோ அல்ல என்றும், காலத்துக்கு ஏற்ற மாற்றம் அனைத்து துறைகளிலும் தேவை என்றும் முதல்வர் கூறினார். பேரிடர்களை எதிர்கொள்வதில் கேரளம் உலகத்திற்கே முன்மாதிரியாக உள்ளது. ஓக்கி, நிப்பா, பெருவெள்ளம், கோவிட் பெருந்தொற்று போன்ற பேரழிவுகளை நாம் சந்திக்க வேண்டியிருந்தது. ஆனால் இதையெல்லாம் எதிர்த்து போராடுவதில் நாம் காட்டிய ஒற்றுமை, பேரழிவை எதிர்கொண்டவிதம் நாட்டிற்கும், உலகிற்கும் முன்னுதாரணமாக திகழ்கிறது.
நாட்டின் வளர்ச்சிக்கான செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லவே செய்யும் என முதல்வர் தெரி வித்தார். நாட்டை முதலீட்டுக்கு உகந்த இடமாக மாற்ற பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தொழில்கள் கேரளாவுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். அதற்கு அனைத்து ஆதரவும் வழங்கப்படும் என்று முதல்வர் கூறினார். வளைகுடா நாடுகளில் சாலை மேம்பாடு உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை நமது நாடும் பெற வேண்டும் என விரும்புபவர்கள் நாம். நாடு வளர்ச்சி யடைய வேண்டும் என்று நாம் அனைவரும் விரும்பு கிறோம். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆட்சியாளர்களுக்கு மலையாளிகள் மீதுள்ள அன்பு அனைவரும் அறிந்ததே. துபாய் ஆட்சியாளர் கேரளத்திற்கு தங்களது இதயத்தில் இடமளித்துள்ளதாக கூறியதையும் முதல்வர் நினைவு கூர்ந்தார்.