world

img

துபாய் எக்ஸ்போ கண்காட்சிக்கான ஏற்பாடுகளை விரைவுபடுத்த வலியுறுத்தல்....

துபாய்:
துபாய் எக்ஸ்போ 2020 கண்காட்சிக்கான ஏற்பாடுகளை விரைவுபடுத்த  வேண்டும் என துபாய் பட்டத்து இளவரசரும், நிர்வாக கவுன்சில் தலைவருமான மேதகு ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் வலியுறுத்தி யுள்ளார்.

துபாய் நகரில் எக்ஸ்போ 2020 கண்காட்சி வருகிற அக்டோபர் 1-ஆம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு (2022) மார்ச் மாதம் 31 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.6 மாத காலம் நடைபெற இருக்கும் இந்த கண்காட்சியானது மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆப்பிரிக்க பகுதியில் நடைபெறும் முதலாவது எக்ஸ்போ கண்காட்சியாகும். இதனால் இந்த கண்காட்சியை சிறப்பான வகையில் நடத்த அமீரக அரசு திட்டமிட்டுள்ளது.ஆலோசனை கூட்டத்திகுப் பின்னர், துபாய் பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் பேசுகையில்,துபாய் நகரில் கொரோனா பாதிப்பை கடந்து எக்ஸ்போ 2020 கண்காட்சி நடக்க இருக்கிறது. எனவே இந்த கண்காட்சிக்கான ஏற்பாடுகளை விரைவுபடுத்த  வேண்டும் என அவசரம், நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மைக்கான சுப்ரீம் கமிட்டிக்கு அறி வுறுத்துகிறேன். துபாய்  உள்ளிட்ட அமீரகத்தில் கொரோனா  தடுப்பு பணிகள்சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருவதால் இயல்பு நிலை திரும்ப உதவியாக இருந்து வருகிறது. இதன் காரணமாக பொது நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடத்தப்படுகிறது. அவர்களது பணிகளுக்கு தனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். பல்வேறு சவால்களை கடந்து இந்த கண்காட்சியை சிறப்புடன் நடத்தி புதிய வரலாறு படைப்போம் என்று தெரிவித்தார்.

;