ஜெனீவா [சுவிட்சர்லாந்து], ஏப்.4 - லிபியாவில் இருந்து மக்களை ஏற்றிச் சென்ற படகு ஒன்று மத்திய தரைக்கடல் கடற் பகுதியில் விபத்துக்குள்ளா னதில், சுமார் 100 புலம் பெயர்ந்தோர் உயிரிழந்த தாக அகதிகளுக்கான ஐநா உயர் ஆணையர் பிலிப்போ கிராண்டி தெரிவித்தார். சமீபத்திய ஆண்டுகளில், ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் வறுமை மற்றும் போரினால் நாட்டை விட்டு வெளியேறும் மக்கள் மத்திய தரைக் கடலைக் கடக்க முயற்சிப்பதால் ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்து இடப் பெயர்வு நெருக்கடியுடன் போராடி வருகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெண்கள், சிறுவர்கள் என 100-க்கும் மேற்பட்டவர்களை ஏற்றி கொண்டு மத்திய தரைக்கடல் வழியாக படகு ஒன்று ஐரோப்பாவை நோக்கிச் சென்றுள்ளது. அப்போது திடீரென எஞ்சின் பழுது காரணமாக அந்த படகு நடுக்கடலில் சிக்கிக் கொண்டது. நான்கு நாட்களாக படகில் இருந்த வர்கள் நடுக்கடலில் சிக்கி தவித்த நிலையில், ஒரு கட்டத்தில் பீதியடைந்து தப்ப முயன்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக படகு கவிழ்ந்து கடல் நீரில் மூழ்கியது. இதில் 100-க்கும் மேற்பட்டவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இது குறித்து தகவலறிந்து வந்த மீட்புக் குழுவினர், கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த ஒரு சிலரை மட்டும் உயிருடன் மீட்டதாக கூறப்படுகிறது. அலெக்ரியா- 1 என்ற வணிகக் கப்பல் திங்களன்று அதிகாலை நான்கு பேரை உயிருடன் மீட்டுள்ளது.