ஜப்பானில் உணவகங்களில் பணிபுரிய தொழிலாளர்கள் பற்றாக்குறையால் உணவகங்கள் ரோபோக்களை பணிக்கு நியமனம் செய்து வருகின்றன.
ஜப்பானில் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் உணவகம், பொது போக்குவரத்து போன்றவற்றில் பெரும்பாலான மக்கள் மீண்டும் பணிக்கு திரும்புவதற்கு அச்சம் நிலவி வருகிறது.
இந்நிலையில் பணியாளர்கள் பற்றாக்குறையைப் போக்க உணவகங்களை பரிமாறுவதற்கு ரோபோக்களை நியமித்துள்ளன. அந்தவகையில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள ஒரு உணவகத்தில் மனித வடிவிலான இயந்திரங்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
புட்லி என்று பெயரிடப்பட்டுள்ள இயந்திரங்கள் தனது முள் போன்ற கைகளால் நூடுல்ஸை அள்ளி வைத்துக்கொண்டு வாடிக்கையாளர்களுக்கு பரிமாறுவது பலரை வெகுவாக கவர்ந்துள்ளது.