ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகே நேற்று இரவு 10.53 மணியளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி ஜப்பானின் டோக்கியோவில் இருந்து 631 கி.மீ வடக்கு-வடகிழக்கில் இருந்ததாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலுக்கு அடியில் அதன் மேற்பரப்பில் இருந்து 59 கி.மீ ஆழத்தில் உருவாகி இருந்தது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவாகி உள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை