டோக்கியோ, ஜூன் 11- பெரு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளிடமிருந்து அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதைத் தடை செய்யும் மசோதாவை ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சி கொண்டு வந்துள்ளது. ஜப்பான் நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவை கம்யூ னிஸ்ட் கட்சி முன்வைத்திருக்கிறது. அந்த மசோதா பற்றி செய்தியாளர்களிடம் பேசிய மேலவை உறுப்பினரான இனோ சடோஷி, “பெரு நிறுவனங்களிடமிருந்து அரசியல் கட்சிகள் நிதி பெறுவதற்கு எதிராக நாங்கள் நீண்ட காலமாக குரல் எழுப்பி வருகிறோம். அதை நிறைவேற்றும் வகையில் ஏற்பாடு ஒன்று அறிவிக்கப்பட்டது. அரசியல் கட்சிகளுக்கு அரசே மானியம் வழங்கும் என்பது அந்த ஏற்பாடாகும். ஆனால் அது நடைமுறைக்கு முழுமையாக வரவில்லை. அதே வேளையில் பெரு நிறுவனங்களிடம் கட்சிகள் நன்கொடை வாங்குவதும் தொடர்கிறது. அரசியல் கட்சி களை ஊழல் மயமாக்கியதோடு, பண அரசியலுக்கும் இட்டுச் சென்றுள்ளது” என்று குறிப்பிட்டார்.