டோக்கியோ,அக்.5- 2011 ஆம் ஆண்டு ஜப்பா னில் ஏற்பட்ட நிலநடுக்கத் தால் பாதிக்கப்பட்ட புகு சிமா அணு உலையில் சேக ரிக்கப்பட்டு வைக்கப்பட்டி ருந்த பல லட்சம் லிட்டர் கதிரி யக்கத்தன்மை கொண்ட கழிவு நீரை கடந்த ஆகஸ்ட் மாதம் உள்நாட்டு மீனவர்கள் மற்றும் சர்வதேச நாடு களின் எதிர்ப்பையும் மீறி கட லில் கலந்துவிடத் துவங்கி யது ஜப்பான் அரசு. கழிவுநீர் நன்கு சுத்தி கரிக்கப்பட்டுள்ளது; கதிரி யக்கத் தன்மை இல்லை யென ஜப்பான் அரசு உறுதி யாகக் கூறியது. அதைத் தொ டர்ந்து 17 நாட்களாக செப்டம் பர் 11 வரை 7,800 டன் கழிவு நீரை கடலில் கலந்து விட்டது. இதனை தொடர்ந்து வியாழனன்று இரண்டாவது உலையில் உள்ள கதிரியக்க கழிவு நீரை கலந்து விட துவங்கியுள்ளது. ஜப்பான் அரசின் இந்த செயல் மீனவர்கள் மற்றும் கடல் உணவு பொருட்களை பயன்படுத்தும் மக்களுக்கு எதிரான நடவடிக்கை என்றும் அவர்களின் வாழ்க்கையை அச்சுறுத்தும் இந்த நடவடிக்கையை நிறுத்த வேண்டுமென வழக்கு தொடுத்துள்ளனர். மேலும் சிலநாட்களுக்கு முன்பு அணு உலையின் சேதமடைந்த பகுதியில் இருந்து கதிரியக்க அணுத்துகள்கள் கொண்ட இரும்புத் துண்டுகள் திருடப் பட்டுள்ளதாக அந்நாட்டு சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்திருந்தது.அணு உலையில் அடிப்படை பாதுகாப்பு கூட முறையாக பராமரிக்கப்படாத போது வெளியேற்றப்படும் கழிவுநீர் அறிவியல் ரீதி யான பல்வேறு சந்தேகங்க ளையும் அச்சத்தையும் எழுப்புகின்றது என அம் மக்கள் குற்றம் சாட்டு கின்றனர்.