world

img

பாலியல் குற்றவாளிக்கான தண்டனையைக் குறைத்ததற்குப் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

சுவிட்சர்லாந்தில் பாலியல் வன்கொடுமை சம்பத்தில் ஈடுபட்ட குற்றவாளியின் தண்டனைக் காலத்தை நீதிமன்றம் குறைத்த சம்பவம் அந்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சுவிட்சர்லாந்து நாட்டில் கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 33 வயதாகும் இளம்பெண் ஒருவர் பேருந்தில் சென்றுள்ளார். அப்போது அதே பேருந்தில் பயணம் செய்த 17 வயது சிறுவன் மற்றும் அவருடைய நண்பர் ஒருவரும் சேர்ந்து அந்தப் பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதனையடுத்து இருவர் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் அவர்களைக் கைது செய்தனர். இதில் 17 வயது சிறுவனைச் சிறார் நீதிமன்றமும், 32 வயதாகும் இளைஞரை மற்றொரு நீதிமன்றம் விசாரித்து வந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது  வழக்கை விசாரித்த பெண் நீதிபதி, குற்றவாளி அந்த பெண்ணை 11 நிமிடம் மட்டுமே பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதனால் தண்டனை குறைக்கப்படுகிறது எனக் கூறி, 56 மாத சிறைத் தண்டனையை 36 மாதங்களாக மாற்றித் தீர்ப்பு வழங்கினார். 

நீதிபதியின் இத்தகைய தீர்ப்பு அந்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நீதிபதியின் தீர்ப்புக்கு எதிராக பல்வேறு பெண்கள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

;