world

img

ஒரே மாதத்தில் கரோனா பாதிப்பு 52% அதிகரிப்பு!

உலகம் முழுவதும் கடந்த ஒரு மாதத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 52% அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 

சமீபகாலமாக புதிய வகை கரோனா திரிபான  ‘JN.1’ மற்றும் ஓமைக்ரான் ‘BA.2.86’ வேகமாகப் பரவி வருகின்றது. இந்தியாவிலும், கொரோனா திரிபான ‘JN.1’ கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் குறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட செய்தி:

“உலகளவில் கடந்த 28 நாள் காலத்துடன் ஒப்பிடுகையில், நவ.20 முதல் டிச.17 வரையிலான 28 நாள் காலகட்டத்தில் 52% அதிகரித்து, 8,50,000-க்கும் மேற்பட்ட புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

சுமார் 1.18 லட்சம் பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கொரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அதில், 1,600 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த காலத்தில் 23% ஆக இருந்த எண்ணிக்கை தற்போது 52%  அதிகரிப்புடன் பதிவு செய்யப்பட்டுள்ளன.

டிசம்பர் 17-ஆம் தேதி நிலவரப்படி, உலகம் முழுவதும் இதுவரை மொத்தம் 77.2 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 70 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 

‘JN.1’ வகை கொரோனாவின் பாதிப்பு குறைவாகவே இருக்கிறது. பனிப்பொழிவு அதிகமாக உள்ள நாடுகளில் மட்டும் ‘JN.1’ வகை கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்குச் சுவாசக் கோளாறு ஏற்படுகிறது.

கொரோனாவால் மட்டும் இன்றி ஃப்ளூ, நிமோனியா போன்ற பாதிப்புகளாலும் சுவாசப் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.

அதனால், மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிதல், அடிக்கடி கைகழுவுதல் போன்ற கரோனா விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.