world

img

கால நிலை மாற்றம்: சீனா செய்ததும் செய்யப்போவதும்! - சிதம்பரம் இரவிச்சந்திரன்

ஷெர்ம் எல்-ஷேக். (எகிப்து) நகரில் காப்27 காலநிலை மாற்றம் குறித்த உச்சி மாநாடு நடைபெறும் சமயம். உலக நாடு கள் குறிப்பாக பணக்கார நாடுகள் பலவும் வெட்டிப்பேச்சுகள் பேசி வாய்ப்பந்தல் போட்டு செல்லும் நேரத்தில் சீனா கால நிலை மாற்றத்தின் தீவிரத்தை குறைக்க செய்தது என்ன, செய்யப்போவது என்ன என்பது பற்றி உலகம் உற்றுநோக்குகிறது.

பொறுப்பும் செயல்திறனும்

உலகளாவிய சூழல் பாதுகாப்பிற்கான வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் சீனா புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் பயன்பாட்டில் பல சிக்கல்களுக்கு இடையிலும் உலகிற்கு தலைமை வகிக்கிறது என்று டிரிவியம் (Trivium) அமைப்பின் பகுப்பாய்வாளர் கோரி கோம்ஸ் (Cory Combs) கூறுகிறார். காப்27 மாநாட்டில் பேசும்போது ஏழை நாடு களுக்கு சூழல் சீரழிவுகளால் ஏற்படும் இழப்பு மற்றும் சேதங்களுக்கு நிதியுதவி செய்யும் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் என்று சீனப் பிரதிநிதிக் குழுவின் தலைவர் கூறியுள்ளார்.

அதிகபட்ச இலக்கு

2015 பாரிஸ் மாநாடு மற்றும் 2020 ஐநா மாநாட்டில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் (Xi Zinping) 2060ஆம் ஆண்டிற்குள் கார்பன் உமிழ்வைக் குறைக்க உறுதியளித்தார். கரியைக் கொண்டு இயங்கும் மின் நிலை யங்களை புதிதாகக் கட்டுவது நிறுத்தப்படும் என்றும் சீனா அறிவித்துள்ளது. 2015இல் ஒவ் வொருநாடும் சூழல் காக்க வாக்குறுதி யளித்த பங்களிப்பை (NDC) விட சீனா அதிக பட்ச இலக்கை நிர்ணயித்துச் செயல்பட்டு வருகிறது. இது நீடித்த நிலையான பொருளா தார வளர்ச்சிக்கும், சூழல் பாதுகாப்பிற்கும் பேருதவியாக அமைந்துள்ளது.

ஐந்தாண்டுத் திட்டங்கள்

2011-15 காலத்திற்கான 12ஆவது ஐந்தாண் டுத் திட்டத்தில் உள்நாட்டு பொருளாதார வளர்ச்சியில் ஒவ்வொரு யூனிட்டிற்கும் கார்பன் உமிழ்வை 17 சதவீதம் குறைக்க திட்ட மிட்டு சீனா வெற்றியடைந்தது. அதன் 14ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தில் 2021-25 காலத்தில் கார்பன் உமிழ்வை 65 சதவிகிதமா க் குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் பயன்பாடு 20லிருந்து 25 சதவிகிதமாக அதி கரிக்கும் என்று நம்பப்படுகிறது.

சாதித்தது என்ன?

கரியை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் மின் உற்பத்திக்கு தடை விதிக்கப்பட்டது. சீன வங்கிகள் இத்தகைய புதிய திட்டங்களுக்கு நிதி வழங்குவதை நிறுத்திவிட்டது என்று சமீபத்தில் நடந்த உலக வள ஆய்வுமையத்தின் கூட்டத்தில் ஆசிய சங்கத்தின் மூத்த ஆய்வாளர் ஷுவாங் லியூ (Shuang Liu) கூறினார். தேசத்தின் புல்வெளிப்பரப்பு, வன விலங்குகள், வனப் பகுதிகளின் பரப்பை பாதுகாக்க, அதிகரிக்க சீனா புதிய தேசியக் கொள்கையை அறிவித்து செயல்படுத்துகிறது.

மின்வாகன உற்பத்தியும் பயன்பாடும்

ஜூன் 2022 வரை 10 மில்லியன் மின் வாகனங்களை உற்பத்தி செய்து சீனா உலக சாதனை படைத்துள்ளது. சேமிப்பு மின்கல வசதி, எரிபொருள் செல் வசதி, புதிய தொழில் நுட்பங்கள், ப்ளக் செய்து மின்னேற்றம் செய்யும் வசதியுடைய வாகனங்கள் இதில் அடங்கும். இது உலகில் உற்பத்தி செய்யப்பட்ட இத்த கையமொத்த  வாகனங்களில் பாதிக்கும் மேல் என்று இலண்டன் பொருளியல் பள்ளியின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இந்த பத் தாண்டிற்குள் 1200 கிகாவாட் அளவு ஆற்றல் உற்பத்தியை புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் வழிகளில் பெற சீனா மகத்தான இலக்கை அடையத்திட்டமிட்டுள்ளது.

காற்று மற்றும்  சூரிய ஆற்றலில்

2021இல் உலகில் புதிதாகத் தொடங் கப்பட்ட காற்று ஆற்றல் திட்டங்களில் 80 சத வீதம் சீனாவில் தொடங்கப்பட்டுள்ளது. கால இலக்குகள் நிச்சயிக்கப்பட்டாலும் அதற்கு முன்பே குறிக்கோளை அடைந்து  சூழல் நட்புடைய திட்டங்களில் உலகில் முன்னணி நாடாக சீனா உள்ளது. இத்துறையில் புதிய ஆய்வுகளும் மேற்கொள்ளப்படுகின்றன. கோபி பாலைவனத் திட்டம் (Gobi desert plan) இதில் குறிப்பிடத்தக்கது. அதில் பேரி டர்கள் ஏற்பட்டாலும் அவற்றை திறம்பட சமாளித்துள்ளது. யாங்சி (Yanngtze), ஷங்காய், சிச்சுவான் (Sichuan) போன்றவை இதற்கு சிறந்த எடுத்துக்காட்டுகள்.2021இல் உலகில் புதிதாகத் தொடங் கப்பட்ட காற்று ஆற்றல் திட்டங்களில் 80 சத வீதம் சீனாவில் தொடங்கப்பட்டுள்ளது. கால இலக்குகள் நிச்சயிக்கப்பட்டாலும் அதற்கு முன்பே குறிக்கோளை அடைந்து  சூழல் நட்புடைய திட்டங்களில் உலகில் முன்னணி நாடாக சீனா உள்ளது. இத்துறையில் புதிய ஆய்வுகளும் மேற்கொள்ளப்படுகின்றன. கோபி பாலைவனத் திட்டம் (Gobi desert plan) இதில் குறிப்பிடத்தக்கது. அதில் பேரி டர்கள் ஏற்பட்டாலும் அவற்றை திறம்பட சமாளித்துள்ளது. யாங்சி (Yanngtze), ஷங்காய், சிச்சுவான் (Sichuan) போன்றவை இதற்கு சிறந்த எடுத்துக்காட்டுகள்.

ஒப்பற்ற தலைமை

செய்யமுடியும் என்று நம்புவதை சீனா செய்கிறது. வருங்கால பொருளாதாரம், சூழலைப் பாதிக்காதவகையில் சீனா செயல் திட்டங்களை வகுத்து செயல்படுத்துகிறது. சூழல் பாதுகாப்பு அரசியல் நடவடிக்கைக ளால் பாதிக்காதவகையில் திட்டங்களை வகுத்து செயல்படுத்துவதில் உறுதியாக இருக்கும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் ஒப்பற்ற ஆளுமையே மற்ற உலக நாடு களில் இருந்து தனிச்சிறப்புள்ள நாடாக சீனாவை திகழச்செய்கிறது என்று ஆசிய சங்கத்தின் அறிக்கை கூறுகிறது. பூமியின் 30 சதவீத நிலப்பரப்பு மற்றும் கடல் பரப்பை பல்லுயிர்ப் பேணலுக்கு ஒதுக்கு வது என்ற இலட்சியத்துடன் டிசம்பர் மாதத்தில் (கனடாவின்) மாட்ரிட் நகரில் நடக்கவிருக்கும் காப்15 உலக பல்லுயிர்ப் பெருக்கம் பற்றிய உச்சிமாநாட்டிற்கு சீனா இந்த ஆண்டு தலைமையேற்று நடத்துகிறது என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி.