பெய்ஜிங், ஜன.12- உலகிலேயே பெரிய மற்றும் உயரமான புத்தர் சிலையை பரா மரிக்கும் வகையில் பல்வேறு வேலைகள் செய்யப்பட வேண் டும் என்று சீன கட்டிட மற்றும் பாரம்பரிய சின்ன வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சீனாவின் சிசுவான் மாகாணத் தில் அமைந்துள்ள இந்த சிலை கற்களால் உருவாக்கப்பட்ட தாகும். உயரமான புத்தர் சிலை என்பதோடு, நவீன காலத்திற்கு முந்தைய காலகட்டத்தில் உரு வாக்கப்பட்ட சிலைகளில் இது தான் உயரமானது என்பது குறிப்பி டத்தக்கதாகும். 71 மீட்டர் உயர முள்ள இந்தச் சிலை அவ்வப் போது பராமரிக்கப்பட்டே வந்தி ருக்கிறது. இருந்தாலும் கால்கள் மற்றும் கைகள் இருக்கும் பகுதி களில் செடிகள் வளர்ந்திருக்கின் றன. 2019 ஆம் ஆண்டில் சில பராம ரிப்பு வேலைகள் செய்யப்பட்டன. கடந்த 100 ஆண்டுகளில் பல முறை பராமரிப்பு வேலைகள் நடந்துள்ளன. இந்த முறை கூடுதல் கவனத்தோடு, புதிய தொழில்நுட்பங்களோடு இந்த வேலைகள் செய்வதற்காக வல்லுநர்கள் பங்கேற்ற ஒரு கருத் தரங்கம் நடந்துள்ளது. அதில் சீனாவின் முன்னணி வல்லுநர்கள் கலந்து கொண்டனர். மூக்குப் பகுதி கறுப்பான தோற்றத்திற்கு மாறியுள்ளது மற்றும் முகத் தோற்றம் மோசமாக மாறி வரு வது ஆகியவை பற்றி இந்தக் கருத்தரங்கத்தில் கவலை தெரி விக்கப்பட்டது. கருத்தரங்கில் பேசிய சில வல்லுநர்கள், கடந்த காலத்தில் பூச்சு வேலைகள் மட்டுமே நடந்தி ருக்கின்றன. தற்போது அதே போன்ற பூச்சு வேலையைச் செய்யாமல் அடிப்படையான பிரச்சனையில் கவனம் செலுத்த வேண்டும். கி.பி. 713 ஆம் ஆண்டு இந்த சிலை அமைப்பு துவங்கியது. 90 ஆண்டுகாலம் கட்டுமானப்பணி நடந்தது. சிலை அமைப்புக்குப் பொறுப்பேற்றுக் கொண்டவர்கள் அரசுப்பணி காரணமாக வேறு இடங்களுக் குச் சென்றதால் கட்டுமானப்பணி இடையிடையே நின்று போனது. நீர்ப்பகுதியில் அமைந்தி ருப்பதால், அதனால் ஏற்படும் பாதிப்புகளை கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ள வல்லுநர்கள், அதைத்தடுப்பதே முழுத்தீர்வாக அமையும் என்று தெரிவித்துள்ளனர்.