world

img

முய்சு சீன பயணம்: உட்கட்டமைப்பு மேம்பாடு ஒத்துழைப்பு பேச்சுவார்த்தை

மாலத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு ஜனவரி 8 முதல் 12 வரை சீனா ஜனாதிபதி ஜி ஜின்பிங் அழைப்பின் பேரில் அரசு முறை பயணமாக சீனா சென்றுள்ளார்.  இப்பயணத்தில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், பிரதமர் லீ கேகியாங் மற்றும் தேசிய மக்கள் காங்கிரஸ்  நிலைக்குழுவின் தலைவர் லெஜி ஆகியோர் ஜனாதிபதி முய்சுவைச் சந்திப்பார்கள் என்று சீன வெளியுறவு அமைச்சகம் தெரி வித்துள்ளது.

இந்த சந்திப்பில் பெல்ட் அண்ட் ரோடு  திட்டம்,பொருளாதார ஒத்துழைப்புகள், கால நிலை மாற்ற நடவடிக்கைகளில் இணைந்து பணி யாற்றுவது, பசுமைப் பொருளாதாரம் மற்றும் சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் உள்கட்டமை ப்பு கட்டுமானம் மேம்படுத்துவது தொடர்பான ஒத்துழைப்பு ஆவணங்களில் இரு நாட்டு தலை வர்களும் பேச்சுவார்த்தை நடத்தி கையெழுத் திடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனால் சீனா மற்றும் மாலத்தீவுக்கு இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மீண்டும் உயிர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகின் பிரபலமான சுற்றுலாத்தளமாக உள்ள புஜியான் மாகாணத்திற்கு முய்சு முதல் நாள் சென்றுள்ளார். புஜியான் மாகாணத்தில் சுற்றுலாத் துறை  உட்பட  இயற்கைக்கு பாதிப்பில் லாத வகையில் கடல் பகுதி வளர்ச்சி கொடுத் துள்ள ஜியாமென்  பல்கலைக்கழகத்தின்  அனுப வம் மாலத்தீவின் வளர்ச்சிக்கு பயன் படுத்தப்படலாம் என  சீனா ஊடகங்கள் தெரி வித்துள்ளன.  முன்னதாக புஜியான் மாகாணத்தின் தலை நகரில் நடைபெறும் மாலத்தீவு முதலீட்டு மன்றத தில் சீன  வணிகத் தலைவர்களைச் சந்தித்து மாலத்தீவுக்கும் சீனாவுக்கும் இடையிலான சமூகப் பொருளாதார உறவுகளை வலுப்படுத்து வதற்கான வழிகள் குறித்து கலந்துரையாட உள்ளதாக மாலத்தீவு ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்திருந்தது.

 மாலத்தீவு தலைநகர் மாலேயின் முன்னாள் மேயராகவும்,முன்னாள் வீட்டுவசதி மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சராகவும் பதவி வகித்த ஜனாதிபதி முய்சு , சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டங்களின் சாதனைகளையும் முயற்சியை யும் ஏற்கனவே பாராட்டியுள்ளார். சுற்றுலாவை முக்கிய பொருளாதாரமாக கொண்டுள்ள மாலத்தீவிற்கு அதுசார்ந்த உதவிகளும் பொருளாதார வளர்ச்சியையும் சீனா கொடுக்கும் என்பதால் சீனாவுடனான உறவை வலுப்படுத்துவதில் முய்சு தீவிரமாக உள்ளார். 2023 அக்டோபர் மாதம்  சீனா செய்தி நிறுவ னம் ஒன்றிக்கு அளித்த பேட்டியில் பெல்ட் அண்ட் ரோடு முயற்சி மாலத்தீவு வளர்ச்சி மட்டுமல் லாது அனைத்து நாடுகளின் வளர்ச்சியிலும் முக்கியப் பங்கு வகிக்கும் என்று நான் நினைக் கிறேன்.

இந்த முயற்சி நிச்சயமாக  எங்கள் நாட்டை முன்னேற்றி  செல்வதில் மிக முக்கியப் பங்காற்று வதை நான் காண்கிறேன் என  முய்சு தெரி வித்திருந்தார்.  இந்நிலையில் மாலத்தீவின் இறையாண்மை யை மதிப்பதாகவும் அதன் உள்நாட்டு விவகாரங் களில் தலையிடாது என்று  சீனா குறிப்பிட்டுள்ள தோடு, மாலத்தீவுடனான மற்ற நாடுகளின் ஒத்து ழைப்பை சீனா ஒதுக்கவில்லை இந்தியா உட்பட பல நாடுகளை   மாலத்தீவுடன் இணைந்து செயல் பட சீனா ஊக்குவித்து வரவேற்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.