world

img

2028இல் சீனா அமெரிக்காவை விஞ்சிடும்...

அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி 2028-ஆம்ஆண்டு உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக சீனா உருவெடுக்கும் என பொருளாதாரம் மற்றும் வணிக ஆராய்ச்சி மையம்(சி.இ.பி.ஆர்) எனும் அமைப்பு கணித்துள்ளது.கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து இரு பெரும் பொருளாதாரங்கள் மீண்டு வருவதில்இருக்கும் கால வேறுபாட்டால்,இதற்கு முன் கணித்திருந்ததைவிட, சீனா ஐந்து ஆண்டுகள் முன்கூட்டியே உலகின் பெரிய பொருளாதாரமாக உருவாகப் போகிறதுஎன சி.இ.பி.ஆர் அமைப்பு கூறியிருக்கிறது.கொரோனா வைரஸ் நெருக்கடியைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதாரச் சரிவுகள், சீனாவுக்கு சாதகமாக அமைந்திருக்கின்றன. கடுமையான கட்டுப்பாடுகள் மூலம் கொரோனா வைரஸைச் சீனா கட்டுப்படுத்திய விதம் மற்றும் மேற்குலகில் சீனாவின் நீண்டகால வளர்ச்சித் திட்டங்களால்,அதன் பொருளாதார செயல்பாடுகள் அதிகரித்திருக்கின்றன.

2021 முதல் 2025 வரையிலான ஆண்டுகளில் சீனாவின் சராசரி பொருளாதார வளர்ச்சி 5.7 சதவீதமாகவும், 2026 - 2030வரை சராசரியாக 4.5 சதவீதமாக இருக்கலாம் என்றும் கூறுகிறது.அதே நேரத்தில் அமெரிக்காவின் பொருளாதாரம், கொரோனாவின் பாதிப்பில் இருந்து 2021-ஆம்ஆண்டில் ஒரு வலுவான மீட்சியைக் காணலாம். அதன் பிறகு 2022 முதல் 2024 வரையிலான ஆண்டுகளில் அமெரிக்கப் பொருளாதாரம் 1.9 சதவீதம் மற்றும்அதற்கு அடுத்தடுத்த ஆண்டுகளில் 1.6 சதவீதமும் வளர்ச்சியைக் காணலாம் என சி.இ.பி.ஆர்.குறிப்பிட்டிருக்கிறது.

ஜப்பானுக்குப் பின் இந்தியா 
அமெரிக்காவின் டாலர் மதிப் பில் பார்க்கும் போது ஜப்பான் நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து2030-ஆம் ஆண்டு வரை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இருக்கும் எனவும்,அதற்குப் பிறகு இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடிக்கலாம் எனவும் குறிப்பிட்டிருக்கிறது.

அப்படி இந்தியா 2030-ஆம் ஆண்டில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இடம் பிடித்தால், ஜப்பான் நான்காவது இடத்தையும், ஜெர்மனி ஐந்தாவது இடத்தையும் பிடிக்கும்.சி.இ.பி.ஆரின் கணக்குப்படி, பிரிட்டன் தற்போது உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இருக்கிறது. 2024-ஆம் ஆண்டில் பிரிட்டன் பொருளாதாரம் ஆறா வது இடத்துக்குப் போகலாம்.2020-ஆம் ஆண்டில், ஒட்டுமொத்த உலகின் மிகப்பெரிய 10 பொருளாதாரங்களின் உற்பத்தியில் 19 சதவீதம் ஐரோப்பாவில் இருந்து வந்தது. பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து கடுமையான கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன் வெளியேறினால், இந்தபங்களிப்பு வரும் 2035-ஆம் ஆண்டில் 12 சதவீதமாகவோ அல்லது அதை விட அதிகமாகவோ சரியலாம் என்று சி.இ.பி.ஆர் கூறுகிறது.மிக முக்கியமாக, இந்த கொரோனா வைரஸின் தாக்கம்,பொருளாதார வளர்ச்சி மந்தமாவதைவிட, பணவீக்கம் அதிகரிப்பதில் எதிரொலிக்கலாம் என சி.இ.பி.ஆர்.சுட்டிக் காட்டியிருக்கிறது.

;