சீனாவில் கூட்டத்தில் கார் புகுந்ததில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சீனாவின் வடக்கே ஹெபய் மாகாணத்தில் ஹண்டன் நகரில் சாலை ஒன்றில் பொதுமக்கள் திரளாக வழக்கம்போல் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக வந்த செடான் வகை கார் ஒன்று அந்த மக்கள் கூட்டத்திற்குள் புகுந்து பலர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் 4 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 14 பேர் காயமடைந்து உள்ளனர்.
இந்நிலையில் கார் ஓட்டுநரை கைது செய்த காவல்துறையினர் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.