சீனாவில் கட்டிடம் இடிந்து விபத்துக்குள்ளானதில் 53 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய சீனா பகுதியில் உள்ள சாங்சா நகரில் குடியிருப்புகளுடன் கூடிய 6 மாடிகளை வணிக வளாக கட்டிடம் உள்ளது. எதிர்பாராத விதமாக சரிந்து விழுந்த இந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கி கொண்டனர். இது பற்றி அறிந்த போலீசார் மற்றும் மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இரவு பகலாக மீட்பு பணி நடந்தது. ராட்சத இயந்திரம் மூலம் இடிபாடுகளை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுவரை கட்டிட இடிபாடுகளில் சிக்கி 53 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு 10 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
மேலும், கட்டிட விபத்து தொடர்பாக 9 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.