world

img

மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து மக்கள் பெரும் போராட்டம்.....

யாங்கூன்:
மியான்மரில் ஆட்சியை கைப்பற்றியுள்ள ராணுவத்தை எதிர்த்து பொதுமக்கள் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  சமூக வலைத்தளங்களும் முடக்கப்பட்டுள்ளன. இதற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. 

தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கடந்த ஆண்டுநவம்பர் மாதம் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் அந்நாட் டின் தலைவர் ஆங் சான் சூகிதலைமையிலான ஆளும் தேசியஜனநாயக கட்சி மீண்டும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த நாட்டு ராணுவம் தேர்தலில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, தேர்தல் முடிவுகளை ஏற்கமறுத்தது. ஆனால் ராணுவத்தின்குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றவை என்று கூறி தேர்தல்ஆணையம் அதனை நிராகரித்தது.இந்த விவகாரத்தில் மியான்மர் அரசுக்கும் அந்த நாட்டு ராணுவத்துக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்தது.

இந்நிலையில் ராணுவம் அராஜகமாக ஆட்சியை கைப்பற்றியது. நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்பட முக்கிய அரசியல் தலைவர் கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளை ராணுவம் கைது செய்து சிறை வைத்துள்ளது. அடுத்தஒரு ஆண்டுக்கு  நாட்டில் ராணுவஆட்சி நடைபெறும் என்றும் அதன்பிறகு தேர்தல் நடத்தப்பட்டு வெற்றியாளரிடம் அதிகாரம் ஒப்படைக்கப்படும் என்றும் ராணுவம் அறிவித்துள்ளது. ராணுவத்தினரின் நடவடிக்கையை உலக நாடுகள் கண்டித்துள்ளன. இந்நிலையில் ராணுவ ஆட்சிக்கு எதிராக அந்நாட்டு மக்கள்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.நேப்பிதாவ் நகரில் ஆயிரக்கணக் கான மக்கள் திரண்டு ராணுவஆட்சிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.  ராணுவ சர்வாதிகாரம் தோல்வி அடையட்டும், ஜனநாயகம் வெல்லட்டும் என்று  போராட்டக்காரர்கள் முழக்கமிட்டனர்.  மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக பெரும்  போராட்டம் நடைபெறுவது இதுதான் முதல் முறை என்று கூறப்படுகிறது.
 

;