ஹவானா, டிச. 12 - அமெரிக்காவின் தீவிர வாதத் தாக்குதல் திட்டத்தை கியூபா அதிகாரிகள் முறி யடித்துள்ளனர். கடல் மார்க்கமாக சட்டவிரோத மாக நாட்டிற்குள் நுழைந்து பயங்கரவாத நடவடிக்கை களுக்கு ஆட்சேர்ப்பு செய்ய முயன்ற நபர்கள் கியூபா வில் கைது செய்யப் பட்டுள்ளனர்.
கைதான நபர்களில், ஒரு வர் கியூபா வம்சாவளி யைச் சேர்ந்தவர் ஆவார். அமெரிக்காவில் வசித்து வந்த இவர், சட்டவிரோத மாக நுழைந்து பயங்கரவாத நடவடிக்கைக்கு திட்டமிட்டு வந்த நிலையில், கைது செய்யப்பட்டு, வெடி மருந்துகள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன. அமெரிக்கரான மானுவல் மிலான்ஸ் பிசோ னெரோ என்பவரிடமிருந்து இந்த சதி திட்டத்துக்கான உத்தரவை பெற்றதாக கை தான நபர் ஒப்புக்கொண் டார்.
கைது செய்யப்பட்ட இரண்டாவது நபர், சட்ட விரோதமாக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் வைத்திருந்தமை, சட்ட விரோத நிதி நடவடிக்கை கள் மற்றும் கொலை தொடர்பாக கியூபாவில் விசாரணையை எதிர் கொண்ட அமெரிக்கக் குடி மகன் அமிஜைல் சாஞ்சஸ் கோண்சாலஸுடன் தொடர்பு வைத்திருந்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.