இருதரப்பு உறவுகள், குறிப்பாக வர்த்தகத்தை மேம்படுத்த கியூபாவின் தலைநகர் ஹவானாவில் வர்த்தகக் கழக ஒன்றை கியூபாவும், மெக்சிகோவும் உருவாக்கியுள்ளன.
இதற்கான தொடக்க நிகழ்வில் கியூபாவின் ஜனாதிபதி மிகேல் டியாஸ் கானல், பிரதமர் மானுவல் மரேரோ மற்றும் பல்வேறு கியூப அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். கியூபாவில் இயங்கும் 150 நிறுவனங்கள் மற்றும் மெக்சிகோவில் இயங்கும் 80 நிறுவனங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் இந்த கியூப-மெக்சிகோ வர்த்தக்கழகத் தொடக்க விழாவில் பங்கேற்கிறார்கள். மெக்கிகோவில் இருந்து வர்த்தகத்துறை அதிகாரியான ஹெக்டர் குர்ரேரோ கலந்து கொண்டு பேசவிருக்கிறார். கடந்த இரண்டு ஆண்டு காலப் பின்னடைவில் இருந்து மீளும் முயற்சிகளைத் தொடர்கிறோம் என்று கியூபாவின் துணை ஜனாதிபதி ரிகார்டோ காப்ரிசாஸ் தெரிவித்துள்ளார்.