world

இந்திய வம்சாவளி முதலாளிகளிடம் இருந்து 33 இந்திய தொழிலாளர்கள் மீட்பு

ரோம்,ஜூலை 18- ஐரோப்பிய நாடான இத்தாலியில் இந்திய வம்சாவளியை  சேர்ந்த கோடீஸ்வரரின் பண்ணையில் நவீன அடிமைகளாக சுரண்டப்பட்டு வந்த 33 இந்திய தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூன் மாதம் சுவிட்சர்லாந்தில் உள்ள இந்திய வம்சாவளி கோடீஸ்வரர்களான ஹிந்துஜா குழுமம் இவ்வாறு இந்திய தொழிலாளர்களை மிக மோசமான முறையில் நவீன அடிமை முறையில் வைத்திருந்தது உலகிற்கு தெரிய  வந்தது. அதே போல தற்போது இத்தாலியிலும், அங்குள்ள  இந்திய கோடீஸ்வரர்கள் இவ்வாறு இந்தியர்களை நவீன அடிமைகளாக சுரண்டி வந்தது அதிர்சியை ஏற்படுத்தி இருப்பதுடன் ஐரோப்பியா நடுகல் முழுமையும் எவ்வளவு தொழிலாளர்கள் இவ்வாறு அடிமையாக சுரண்டப்பட்டு வருகிறார்கள் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.     

வேலைக்கு இணையும் ஒவ்வொரு தொழிலாளரும் தலா 15,48,752  ( 17, 000 யூரோ )கட்டணமாக செலுத்த வேண்டும்  எனவும் அதன்பிறகு அவர்கள் தற்காலிக பணி உரிமம் மூலம் வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், தற்போது மீட்கப்பட்டுள்ள தொழிலாளர்கள்  10-12 மணிநேரம் பண்ணைகளில் வேலை வாங்கப்பட்டுள்ள னர். அவர்களுக்கு ஒரு மணிநேரத்திற்கு வெறும் 3 அல்லது  4 யூரோ   அதாவது இந்திய மதிப்பில் 273 முதல் 364 ரூபாய் மட்டுமே ஊதியமாக வழங்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.  தற்காலிக உரிமத்தில் வேலை செய்யும் இவர்கள்  நிரந்தர பணி உரிமம் பெற மேலும் 13,000 யூரோக்கள் (11,84,053 ரூபாய் ) கொடுக்க வேண்டும் என பொய் கூறி சம்பளமே கொடுக்காமல் பல மணிநேரம் சுரண்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.