world

img

பெல்ஜியத்தில் கிண்டர் ஜாய் சாக்லேட்டுக்கு தடை  

பெல்ஜியத்தில் கிண்டர் ஜாய் சாக்லேட் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  

இத்தாலிய மிட்டாய் குழுவான ஃபெரேரோவிற்கு பெல்ஜியத்தில் உள்ள அதன் ஆலையில் உற்பத்தியை நிறுத்துமாறு பெல்ஜியம் சுகாதார அதிகாரிகள் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டனர். இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளில், கிண்டர் ஜாய் சர்பிரைசஸ் சாக்லேட் சோதனை செய்யப்பட்டது. இதில், குழந்தைகள் குடற்காய்ச்சலால் பாதிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.  

இதனைதொடர்ந்து கிண்டர் ஜாய் சர்பிரைசஸ் சாக்லேட்டை தயாரிக்கவும், விற்பனை செய்யவும் பெல்ஜியம் நாட்டின் உணவு பாதுகாப்பு ஆணையம் தடை வித்துள்ளது. மேலும் பெல்ஜியத்தில் செயல்பட்டு வரும் பெரேரோ குழுமத்தின் சாக்லேட் தொழிற்சாலையை இழுத்து மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையடுத்து பெரேரோ குழுமம் கிண்டர் ஜாய் சர்பிரைசஸ் சாக்லேட்டை, வெளிநாட்டு சந்தையிலிருந்து திரும்பப் பெற்றுள்ளது. மேலும் விற்பனை கிண்டர் ஜாய் சர்பிரைசஸ் சாக்லேட்டில் குடற்காய்ச்சல் நோய் ஏற்படுத்தும் பாக்டீரியா இருப்பது உறுதி செய்யப்படவில்லை என பெரேரோ குழும நிறுவனம் தெரிவித்துள்ளது.