சனா, ஜூன் 15- ஏமன் நாட்டில் ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் இருந்து எண்ணெய் வளத்தைக் கொள்ளையடிக்க முனைந்தால் சவூதி அரேபியாவின் எண்ணெய் இருப்புகளைக் குறிவைத்துத் தாக்குவோம் என்று ஏமன் அறிவித்திருக்கிறது. கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளத்தை ஏமனில் இருந்து சவூதி அரேபியாவும், அதன் கூட்டாளிகளும் எடுத்துச் செல்கிறார்கள். தங்கள் வளம் இப்படிக் கொள்ளை போவது தொடர்ந்தால், பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம். பதிலடி கொடுப்போம் என்று ஏமன் உயர்மட்ட அரசியல் குழுவின் ஆலோசக ரான முகமது தாஹிர் அனம் தெரிவித்துள் ளார். இது பற்றிப் பேசிய அவர், ஆக்கிர மிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து வளங் களைக் கொள்ளையடிப்பதோடு, கடற்பகுதி யில் ஏமனின் கப்பல்களையும் வளைக் கிறார்கள். சவூதி நிறுவனங்களையும், அவற்றின் கப்பல்களையும் நாங்கள் குறி வைக்கப் போகிறோம்” என்று குறிப்பிட்டார்.