மின்சாரம் வாகனங்களைப் பயன்படுத்துவ தால் தற்போது நாள் ஒன்றுக்கு 18 லட்சம் பேரல் கச்சா எண்ணெய்த் தேவை குறைவதாக கிளீன் டெக்னிக்கா என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துத் துறை க்கு மட்டும் நாள் ஒன்றுக்கு உலகம் முழுவதும் 15 பீப்பாய் எண்ணெய்களின் தேவை இருந்தது. மின்சார வாகனங்கள் மற்றும் எரிபொருள்-செல் வாகனங்க ளின் பயன்பாடுகள் அதிகரித்திருப்பதன் காரணமாக 2023 ஆம் ஆண்டில் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 18 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் தேவை குறைந்தி ருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அந் நிறுவனம் தெரிவித்துள்ளது.
காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதில் மின் சார வாகனங்கள் குறிப்பிடத்தக்க பங்கு வகித்தா லும் முதலாளித்துவ நாடுகள் புதை படிவ எரிபொருள் பயன்பாட்டை குறைக்காமலும் வளரும் நாடுகளுக்கு நிதி உதவி செய்யாமலும் முழுமையாக கட்டுப்படுத்த இயலாது என தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வருகிறது.
2015 முதல் 2023 வரை நாளொன்றுக்கு 7 லட்சத்து 20 ஆயிரம் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் நுகரப்பட்ட நிலையில் மின்சார வாகன பயன்பாடு அதிகரிப்ப தால் தற்போது அதில் இரண்டரை மடங்கு குறைந்துள்ளது என்றும் இந்த அளவு மேலும் அதிக ரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
குறிப்பாக சீனா, தென்கிழக்கு ஆசியா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் வேகமாக அதிகரித்து வரும் மின்சார வாகனங்களின் பயன்பாடுகள் காரண மாக கிட்டத்தட்ட 60 சதவீதம் வரை எண்ணெய்த் தேவை குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கச்சா எண்ணெய்ப் பயன்பாட்டைக் குறைப்பதில் மின்சாரப் பயணிகள் பேருந்துகள் முக்கியக் காரண மாக அமையும் என்றும் மின்சாரப் பேருந்துகளின் காரணமாக 2023 முடிவில் கிட்டத்தட்ட 23 சதவீதம் கச்சா எண்ணெய் பயன்பாடு தவிர்க்கப்பட்டு இருக்க லாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மின்சார வாகனங்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில் 2035 ஆம் ஆண்டு ஒரு நாளைக்கு 124 லட்சம் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் தவிர்க்கப்படும் எனவும் அந்நிறு வனம் தெரிவித்துள்ளது.