பெய்ரூட்,அக்.3- ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா இஸ்ரே லுடனான மோதலை 21 நாட்கள் தற்காலிகமாக நிறுத்திக்கொள்ள ஒப்புக்கொண்ட பிறகே அவரை இஸ்ரேல் ராணுவம் படுகொலை செய்தது என லெபனான் வெளி யுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா பௌ ஹபீப் அதிர்ச்சி தக வலை தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 27 அன்று பெய் ரூட்டில் இருந்த ஹிஸ்புல்லா அமைப்பின் பதுங்கு குழியில் நஸ்ரல்லா உள்ளிட்ட முக்கிய தலை வர்கள் கூடி இருந்த பொழுது, பதுங்கு குழிகளை தகர்க்கும் அதிக சக்தி வாய்ந்த குண்டுகளை வீசி அவர்களை இஸ்ரேல் ராணுவம் படுகொலை செய்தது.
நஸ்ரல்லா படுகொலை செய் யப்படுவதற்கு சில மணி நேரங்க ளுக்கு முன்பு தான் ஹிஸ்புல்லா போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண் டது என்றும், அதனை லெபனான் மூலம் அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கும் தெரிவிக்கப்பட்டது என்றும் அந்நாடுகள் மூலம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
லெபனானின் இந்த முயற்சி யை அமெரிக்கா, பிரான்ஸ் ஆகி யவை வரவேற்பதாக தெரிவித்த தாகவும் லெபனான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல்லா கூறி யுள்ளார்.இந்த அதிச்சித்தகவலை அமெரிக்க பத்திரிகையாளரும் அரசியல் விமர்சகருமான கிறிஸ்டி யன் அமன்பூர் உடனான பேட்டியின் போது வெளியிட்டுள்ளார்.