world

img

தீக்கதிர் உலக செய்திகள்

29 ஆவது முறையாக  கும்பல் படுகொலை

அமெரிக்காவின் துப்பாக்கிக் கலாச்சாரம் காரணமாக இந்த ஆண்டு மட்டும் 29 முறை கும்பல் படுகொலைகள் நடந்துள்ளன. இவற்றில் கிட்டத்தட்ட 127 பேர் படுகொலையா கியுள்ளதாக அரசுத் தரவுகள் தெரிவிக்கின்றன. புதன்கிழமையன்று அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் ஒரு பள்ளியில்  நடைபெற்ற துப் பாக்கிச் சூட்டில் 4 பேர் படுகொலை செய்யப்பட் டுள்ளனர். இது போன்ற படுகொலைகளை தடுக்க அமெரிக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

மத்திய காசாவில்  போலியோ தடுப்பூசி 

மத்திய காசாவில் 10 வயதுக்குட்பட்ட 1,87,000 குழந்தைகளுக்கு முதல் கட்ட போலியோ தடுப்பூசி மூன்று நாளில் போடப்பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. ஒவ்வொரு குழந்தைகளுக்கும் நான்கு நாள் இடைவெளியில் இரண்டு டோஸ் தடுப்பூசி  கட்டாயம் போடவேண்டும் எனவும், 6,40,000 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இரண்டு டோஸ் போலியோ தடுப்பூசி வழங்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது எனவும் உலக சுகாதார அமைப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கதேச வெள்ளம்:   ஐ.நா. நிவாரண நிதி 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள வங்க தேசத்துக்கு ஐ.நா அவை அவசரகால நிவாரண நிதியிலிருந்து 40 லட்சம் டாலர்களை ஒதுக்கியுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள 60 லட்சம் மக்களுக்கு உதவி செய்ய இந்த நிதி பயன்படுத்தப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் இறுதி முதல் பெய்துவரும் கனமழை வெள்ளத்தால் 5,00,000 மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி 3,400க்கும் மேற்பட்ட  முகாம்களில்  தங்கி யுள்ளனர். 

கமலா ஹாரிசுக்கு   புடின் ஆதரவு 

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜன நாயகக் கட்சியின் வேட்பாளரான கமலா ஹாரிசை ஆதரிப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடி மிர் புடின் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகி யுள்ளன. ஜனாதிபதி பைடன் எங்களுக்கு “பிடித்த வர்”.ஆனால் அவர் ஜனாதிபதி போட்டியில் நீக்கப் பட்டார். இதனால் தனது ஆதரவாளர்கள் கமலா ஹாரிசை  ஆதரிக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார். நாங்களும் அவரை ஆதரிக்கி றோம்  என அவர் பேசியுள்ளதாக அந்தச் செய்திகள் கூறுகின்றன.

கனடாவில் ட்ரூடோ  ஆட்சி கவிழ்கிறதா?

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் சிறு பான்மை தாராளவாத அரசாங்கத்திற்கு கொடுத்து வந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக  புதிய ஜனநாயக கட்சி அறிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டு இரு கட்சிகளுக்கும் இடையே போ டப்பட்ட ஒப்பந்தத்தை விட்டு வெளியேறுவதாகவும்  அக்கட்சியின் தலைவர் ஜக்மீத் சிங் தெரிவித்துள்ளார். ட்ரூடோ மக்களை விட்டு விட்டு கார்ப்பரேட்டுகளை வாழ வைப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஆதரவை திரும்பப் பெற்றதன் மூலம் ட்ரூடோவின் ஆட்சி கேள்விக் குறியாகியுள்ளது.