world

img

உக்ரைன் ராணுவ தளங்கள் மீது ரஷ்ய படைகள் தாக்குதல்

உக்ரைனில் ராணுவ தளங்கள் மீது ரஷ்யப்படைகள் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.
உக்ரைனின் மீது ரஷ்யா போர் தொடுக்க உள்ளதாக கூறி அமெரிக்க தொடர்ச்சியாக உக்ரைனில் நேட்டோ படைகளை குவித்து பதற்றத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து ரஷ்யாவும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உக்ரைன் எல்லைப்பகுதியில் தனது படைகளை குவிக்கத் துவங்கியது. அதேசமயம் ரஷ்யாவை ராணுவ ரீதியாக சுற்றி வளைப்பது என்ற திட்டத்தின்  அடிப்படையில், நோட்டோ விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக உக்ரைனில் ஒரு பெரிய இராணுவ தளத்தை நிறுவ அமெரிக்கா மற்றும் நேட்டோ  நாடுகள் முயன்றன.  அதேசமயம் ரஷ்ய ஜனாதிபதி ஏற்கனவே நேட்டோ அறிவித்திருந்த உறுதி மொழியின்படி முன்னாள் சோவியத் யூனியன் பிரதேசத்தில் நேட்டோ படைகளை குவிப்பதை தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார். 
ஆனால் அமெரிக்க தொடர்ந்து போரைத் தூண்டும் வகையிலான நெருக்கடியை கொடுத்து வந்தது. இந்நிலையில் இன்று உக்ரைன் ராணுவ தளங்கள் மீது ரஷ்யப்படைகள் தாக்குதலை தொடுத்துள்ளது. 
இந்நிலையில் உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்ட ரஷ்ய படைகளுக்கு உத்தரவிட்டுள்ள விளாதிமீர் புடின் வியாழனன்று தொலைக்காட்சி உரையில் கூறியதாவது: உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. உக்ரைனில் இருந்து வரும் அச்சுறுத்தலுக்கு பதிலடியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் உக்ரைனை ஆக்கிரமிக்கும் நோக்கம் ரஷ்யாவுக்கு இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் பொது மக்களை பாதுகாக்கும் நோக்கம் கொண்டதே இந்த தாக்குதல் என்றும் தெரிவித்துள்ளார். அதேசமயம் உக்ரைன் ராணுவம் தனது ஆயுத நடவடிக்கைகளை கைவிட வேண்டும். தவறும் பட்சத்தில் ரஷ்ய நடவடிக்கையால் ஏற்படும் உயிர் பலி, ரத்தக்களரிகளுக்கு உக்ரைன் ஆட்சியாளர்களே பொறுப்பு. ரஷ்ய நடவடிக்கையில் தலையிடும் எந்தவொரு நாட்டின் முயற்சிக்கும் அவர்கள் பார்த்திராத விளைவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.