உக்ரைனில் சிந்திப்பதற்கே அச்சுறுத்தும் உயிரிழப்புகள் நடைபெற்றுள்ளதாக செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகளின் தொடர் நெருக்கடிக்கு மத்தியில் உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ தாக்குதலை தொடங்கி உள்ளது. இதனால் ரஷ்யா உக்ரைன் உள்ளிட்ட இருதரப்பிலும் ஏராளமான உயிர் பலிகள் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் உக்ரைனில் சிந்திப்பதற்கு அச்சுறுத்தும் அளவில் பெரிய அளவிலான உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என்று செஞ்சிலுவைச் சங்கம் அச்சம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவரான பீட்டர் மௌரர் வெளியிட்ட ஒரு அறிக்கையில், “நீர் மற்றும் மின்சார ஆலைகள் போன்ற பொதுமக்களின் பொருள்கள் பெருமளவில் அழிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளதால், துன்பம் அதிகரிக்கும் என்று நான் அஞ்சுகிறேன். இதனால் பெரிய அளவில் உயிரிழப்பு மற்றும் மக்களின் இடப்பெயர்வு, குடும்பப் பிரிவினை போன்றவை ஏற்படும் அபாயம் உள்ளது” என்று அவர் எச்சரித்துள்ளார். போரில் ஈடுபடும் அனைத்து தரப்பினரும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தை கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.