உக்ரைனின் மிகப்பெரிய நகரமான கார்கிவிலிருந்து இந்தியர்கள் வெளியேற வேண்டும் என்று இந்திய தூதரகம் உத்தரவிட்டுள்ளது.
உக்ரைன் ரஷ்யா போர் இன்று 7 வது நாளாக தொடர்கிறது. ஏற்கனவே நேற்று கார்கிவ் பகுதியில் இந்திய மாணவர் ஒருவர் குண்டு வீச்சு தாக்குதலால் உயிரிழந்தார். இந்நிலையில் தொடர்ந்து கார்கிவ் பகுதியில் ரஷ்ய ராணுவப்படைகள் தாக்குதலை நடத்தி வருகின்றன. இந்நிலையில் கார்கிவ் நகரில் இருந்து இந்தியர்கள் உடனடியாக வெளியேறி உக்ரைன் நேரப்படி இன்று மாலை 6 மணிக்குள் பெசோசின், பாஃபாயி, பென்ஸிலிடோக்கா ஆகிய பகுதிகளில் தஞ்சமடைய வேண்டும் என இந்திய தூதரகம் உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே தலைநகர் கீவ்விலிருந்து நேற்று இந்தியர்கள் வெளியேற உத்தரவிடப்பட்டிருந்த நிலையில் இன்று கார்கிவிலிருந்து வெளியேற இந்திய தூதரகம் உத்தரவிட்டுள்ளது.