உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள இந்திய தூதரகம் மூடப்பட்டு, அங்கிருந்த தூதரக அதிகாரிகள் அனைவரும் நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள லிவிவ் நகருக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
உக்ரைன் ரஷ்ய போர் இன்று 7 வது நாளாக தொடர்கிறது. இந்நிலையில் கீவ் நகரின் ஏனைய பகுதிகளையும் தாக்கக் கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அங்கி சிக்கியிருந்த மீதமுள்ள அனைத்து இந்தியர்களும்"அவசரமாக" வெளியேறுமாறு வெளியுறவு அமைச்சகம் நேற்று உத்தரவிட்டது. அங்கிருந்த இந்தியர்கள் உக்ரைன் நாட்டின் மேற்கு பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இதையடுத்து கீவ் நகரில் இந்தியர்கள் யாரும் இல்லை என இந்திய தூதரகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது இந்திய தூதரகம் மூடப்பட்டு அங்கு பணியில் இருந்த அதிகாரிகள் மேற்கு பகுதியில் உள்ள லிவிவ் நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
போர் அச்சுறுத்தலுக்கு உள்ளானதால், ஓராண்டுக்குள் ஒரு நாட்டில் உள்ள தனது தூதரகத்தை இந்தியா மூடுவது இது இரண்டாவது முறையாகும். 2021 ஆகஸ்ட் 16 ஆம் தேதி ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் உள்ள தனது தூதரகத்தை இந்தியா மூடியது குறிப்பிடத்தக்கது.