உக்ரைனில் 4 நகரங்களில் தற்காலிகமாக போரை நிறுத்தி வைத்துள்ளதாக ரஷ்ய அறிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி போா் தொடுத்தது. தொடர்ந்து தலைநகா் கீவை சுற்றிவளைத்து ரஷ்ய படையினா் தாக்குதல் நடத்தி வருகின்றனர். தலைநகரை சுற்றிய பகுதிகளில் ரஷ்ய படைகள் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் உயிருக்கு அஞ்சி அந்த நாட்டிலிருந்து அகதிகளாக வெளியேறும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 15 லட்சம் அகதிகள் உக்ரைன் எல்லைகளைக் கடந்துள்ளதாக ஐ.நா. அகதிகள் அமைப்பின் ஆணையா் ஃபிலிப்போ கிராண்டி ட்விட்டரில் தெரிவித்துள்ளாா்.
இந்த நிலையில் பிரான்ஸின் கோரிக்கையை ஏற்று உக்ரைன் தலைநகர் கீவ், கார்கிவ், மரியபோல் மற்றும் சுமி நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷியா இன்று அறிவித்தது.
மனிதாபிமான அடிப்படையிலும், மக்கள் பத்திரமாக வெளியேறும் வகையிலும் போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்துள்ளது.